Thursday 6 March, 2008

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ஊர்!

வட இந்திய சுற்றுலா என்றால் சாதாரணமாக நினைவு வருவது டெல்லி, க்ரா, மதுரா, ஜெய்பூர், உதய்பூர், வராணாசி, அலஹாபாத் கியவைகள்தான். ஏனோ லக்னோ என்ற ஊர் ஒன்று இருக்கிறது, அங்கு பார்த்து அதிசயப்பட வேண்டிய இடங்கள் இருக்கின்றன என்பது பலருக்கு தெரியவே இல்லை.


லக்னோ ரெயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் உடனே நம் காமிராவுக்கு வேலை வந்து விடுகிறது. உள்ளூர் மக்களால் சார்பாக் என்று செல்லமாக அழைக்கப் படும் அந்த ஸ்டேஷனின் வெளிப்புறத் தோற்றம் கொள்ளை அழகு. முன்பு லக்னோவை ண்ட நாவாப்களின் கட்டிடகலையை பறை சாற்றும் விதமாக இருக்கிறது. தற்காலத்து ஏற்ப ஸ்டேஷனுக்குள் பல மாற்றங்கள் வந்தாலும் வெளித் தோற்றத்தை புராதன பொலிவோடு இன்னமும் பாதுகாத்து வரும் ரெயில்வே துறைக்கு ஒரு 'ஓ' போடலாம்.


லக்னோவின் பிரதான டூரிஸ்ட் ஸ்பாட்டே 'படா இமாம்பாரா' என்று அழைக்கப்படும் பூல்புலையா (bhool bhulaiya) தான். 1784ம் ண்டு அஸ்ப் உத்தௌலா என்ற நவாப்பினால் கட்டப்பட்ட இந்த மிகப் பெரிய மசூதியின் மையப் பகுதிக்கு போவதுதான் த்ரில்ங் அனுபவம். சிறுவர்களை கவர பத்திரிகைகளில் ட்டுக்குட்டிகளை அதன் தாயோடு சேர வழிகாட்டவும், நாய் இங்கே ரொட்டித் துண்டு அங்கே என்று மத்தியில் சிக்கலான கட்டங்கள் போட்டு முளைக்கு வேலை கொடுப்பார்களே அந்த மாதிரி ஒரு கட்டிடமே நம் முன்னால் இருந்தால்? அப்படி இருக்கிறது இந்த இமாம்பாரா.

சின்ன நுழைவாயில். அரை இருட்டில் நீண்டு போகும் குறுகலான சந்து போன்ற பாதையை பார்த்தால் மொபசல் ஏரியா சினிமா தியேட்டர்களின் டிக்கெட் கௌண்டர்கள் ஞாபகத்துக்கு வரும். திடீர் திடீரென திருப்பங்கள். நாம் சரியாகதான் போய் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து ஒரு திருப்பத்தில் திரும்பினால் பாதை அங்கே முடிவடைந்து சுவர்தான் இருக்கும். ஏமாற்றத்தோடு வந்த பாதையிலேயே திரும்பி வர வேண்டும். ஒரே ஒரு பாதைதான் சரியான பாதை. அது தெரியாதவர்கள் சுற்றி சுற்றி வரவேண்டியதுதான். கைடுகள் கூட கொஞ்ச நேரம் நம்மை திண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

மைய பகுதில் நவாப்பின் தர்பார் இருக்கிறது. மேல் பகுதியில் சின்ன சின்ன பால்கனிகள் இருக்கின்றன. ராணிகளும் அவர்களின் சேடிகளும் அந்த பால்கனியில் அமர்ந்து ராஜபரிபாலனத்தை கண்டு மகிழ்வார்களாம். இந்தப் பக்க பால்கனிகும் எதிர் பக்க பால்கனிக்கும் கிட்டத்தட்ட 500 அடி தூரம் இருக்கிறது. னால் இந்தப் பக்கத்திலிருந்து தீப்பெட்டியில் தீக்குச்சியை தேய்த்து கொளுத்தும் போது வரும் சத்தம் கூட அந்தப்பக்கம் உள்ளவர்களுக்கு கேட்கிறது. சுற்றுலா பயணிகள் பிரமித்து போகிறார்கள். சரக் சரக்கென்று தீக்குச்சி உரசும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆக்ரா-·பதேபூர் சீக்ரியில் அக்பர் கட்டிய புலந்த்தர்வாஜா (bhuland dharwaja) மாதிரி பிரும்மாண்டமாக இல்லாவிட்டாலும் கட்டிட கலையம்சத்தோடு கூடிய ரூமி தர்வாஜா லக்னொவில் இருக்கிறது. இது துருக்கி காண்ஸ்டாண்டி நோபிளில் உள்ள கட்டிடத்தின் கார்பன் காப்பி கும். இந்த கட்டிடம் மட்டும் உயரமானது அல்ல. நவாப்பின் மனசும்தான். அவர் ட்சி காலத்தில் கொடுமையான பஞ்சம் வந்ததாம். மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் தன் கலை தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ரூமி வாசலை கட்டினாராம். வாழ்க மன்னர்.


ஈராக்கிலிருந்து 200 கி,மி. தொலைவில் உள்ள நஜ·ப் நகரை ஞாபகப்படுத்தும் விதமாக ஷா நஜ·ப் இமாம்பாரா என்று ஒண்று உள்ளது. நஜ·ப் தர்காவில் ஹஸ்ரத் அலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது என்றால் இங்கு காசிஉத்தின் ஹைதர் என்ற நவாப்பின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அவர் சமாதி தவிர அவரது ஏராள மனைவிகளின் சமாதிகளும் உள்ளன. அதில் ஒரு வெள்ளைக்காரி ராணியும் அடக்கம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். வெள்ளியும் தங்கமுமாக கும்பங்கள் ஜொலிக்கின்றன. உள்ளே சுவர் வேலைப்பாடுகளையும், தொங்கும் சாண்டிலியர்களையும் திகட்ட திகட்ட பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதைப்போல இன்னும் பல புராதன கட்டிடங்கள் லக்னோவில் மூலைக்கு மூலை இருக்கின்றன.

கட்டிடங்களை பார்த்து போரடித்து போனவர்களுக்கு இருக்கவே இருக்கிறது. ஹஸ்ரத் கஞ்ச். எல்லா ஷாப்பிங் மால்களும் இங்குதான் இருக்கின்றன. நம் பர்ஸ்களுக்கு பத்து காத்திருக்கிறது. 'சிக்கன்' எம்பிராய்டரி(இதற்கும் கோழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) வேலைப்பாடு கொண்ட சேலைகள் சுடிதார்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. உத்திரப்பிரதேசத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தயாராகும் அத்தனை கைவினைப் பொருட்களும் கொட்டிக் கிடக்கின்றன. நம்மூர் சங்கு மார்க் லுங்கிகளையும் திருப்பூர் பனியன் சமாசாரங்களையும் நம்மிடமே கூவிகூவி விற்கிறார்கள்.

பிக்னிக் ஸ்பாட் எதுவும் இல்லையா என்று கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது முதலைப் பண்ணை. காட்டிலாக்கா மேற்பார்வையில் இந்தப் பகுதி இருப்பதால் இயற்கை சூழல் படு ரம்மியமாக இருக்கிறது.

லக்னோவில் இன்னமும் சைக்கிள் ரிக்ஷாக்கள் இருக்கின்றன. மூன்று கி.மி. தூரம் உள்ள இடத்துக்கு கூட வெறும் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு நெரிசலான தெருக்களில் பொறுமையாக அழைத்து போகிறார்கள். அடாவடித்தனம் இல்லை. பணத்தை வாங்கி கொள்ளும் போது கும்பிடுகிறார்கள். ஒரு பக்கம் வெள்ளையும் சொள்ளையுமாக வாயில் பான்பராக் மணக்க ஏ.சி.காரில் வலம் வரும் மேல்தட்டு மக்கள். முழங்காலுக்கு மேல் கட்டிய அழுக்கு வேட்டியுடன் அஞ்சுக்கும் பத்துக்கும் லாய் பறக்கும் ஏழை மக்கள்.

லக்னொ ரயில் நிலையத்துக்கு திரும்பும் வழியில் ஒரு நீண்ட கலையம்சம் கொண்ட கட்டத்தை பார்க்க நேரிட்டது. அது என்னவென்று விசாரித்ததில் அது உத்திரபிரதேசத்தின் சட்டசபையாம். உ.பி அரசியல் அழுக்கும் அசிங்கமாகவும் இருக்கலாம். னால் லக்னோ அழகுதான்.

(அமுதசுரபி - மார்ச் 2008)

No comments: