tag:blogger.com,1999:blog-49952557081936321892024-03-14T05:09:28.431+05:30மெலட்டூர்.இரா.நடராஜன்என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.comBlogger146125tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-37675789391155803062013-09-27T10:18:00.000+05:302013-09-27T10:36:13.795+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: small;"><span style="font-family: Arial,Helvetica,sans-serif;">உயர்திரு அம்மா அவர்களுக்கு</span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Arial,Helvetica,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: small;"><span style="font-family: Arial,Helvetica,sans-serif;">நீங்கள் மழைநீர் சேகரிப்பு திட்டதிற்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதை இந்த நாடே அறியும். எனவே அது சம்பந்தமாக உங்களிடம் ஒரு சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.</span></span><br />
<span style="font-size: small;"><span style="font-family: Arial,Helvetica,sans-serif;"><br /></span></span>
<span style="font-size: small;"><span style="font-family: Arial,Helvetica,sans-serif;">தமிழக அரசு முத்திரையில் பிரதானமாக விளங்குவது ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் ராஜ கோபுரம். அப்படி பெருமைவாய்ந்த அந்த ராஜ கோபுரத்தை கொண்ட அந்த ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி எப்படி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லவே இந்த பதிவு. </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="font-family: Arial,Helvetica,sans-serif;">முதலில் இந்த புகைப்படத்தை பாருங்கள். </span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgk-n5TUDAKrX64QBs8iTKPang_nHc2cfEjE1iJSZI3RCHjE1uoKaincytdQ_4rRQ3pQHqSquUpx5M7rxXjL47i9ZYbKEop99muYJh67JJZqBy3vPlpX8DYeiZqxJkYMwfTqIJTPa4byl9I/s1600/Photo0413.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgk-n5TUDAKrX64QBs8iTKPang_nHc2cfEjE1iJSZI3RCHjE1uoKaincytdQ_4rRQ3pQHqSquUpx5M7rxXjL47i9ZYbKEop99muYJh67JJZqBy3vPlpX8DYeiZqxJkYMwfTqIJTPa4byl9I/s320/Photo0413.jpg" width="320" /></a></div>
<br />
இது நகராட்சியின் மிக நெரிசலான தெருக்களில் (சந்துகளில்) உள்ளடங்கி இருக்கும் ஒரு வைணவ கோயியின் திருக்குளம். இந்த குளத்துக்கு வர வேண்டிய நீர் ஆதாரங்களுக்கான வடிகால்கள் ஆக்கிரமிப்பினால் அடைபட்டு போய்விட்டன. தற்போது ஒரு மிக பெரிய குப்பை குழியாக மாறும் அவலநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் யாராவது இதை மணல் கொட்டி சமன் செய்து குடியிருப்புகளோ அல்லது வியாபார நிறுவங்களையோ உருவாக்கிவிடலாம். ஆனால் அந்த பகுதியில் பெய்கின்ற மழை நீர் சாக்கடைகள் மூலமாக பெருகி, வடிகால் இல்லாமல் அடைப்பட்டு, வெள்ளமாக பெருக்கெடுத்து, சுகாதார கேடுகளை உருவாக்கி, அரசுக்கு மிகப்பெரிய நிரந்தர தலைவலியை தந்து கொண்டிருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.. <br />
<br />
இந்த படத்தை பாருங்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgixx_UxpLo9qagx5jUCfMU036FywIJpqpaPuGLnjJKRhhzKnix6f5Nw3jb-7fckCfqSzkhnBNK-q0LxKUxVoA7rRAP2sfDMy6P0YKlhN7FQ9sCoqlzWCdl3zcI6qu32GfA5qQEKc3r1GUo/s1600/Photo0429.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgixx_UxpLo9qagx5jUCfMU036FywIJpqpaPuGLnjJKRhhzKnix6f5Nw3jb-7fckCfqSzkhnBNK-q0LxKUxVoA7rRAP2sfDMy6P0YKlhN7FQ9sCoqlzWCdl3zcI6qu32GfA5qQEKc3r1GUo/s320/Photo0429.jpg" width="320" /></a></div>
<br />
இந்த கால்வாய் தற்போது கழிவு நீர் கால்வாயாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் இது நல்ல நீர் பெருக்கெடுத்து ஓடிய வாய்க்காலாக இருந்ததாக ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் சொல்கிறார்கள். இது ஏன் இந்த நிலைமைக்கு உள்ளானது? நீர் வடிகால்களையும், நீர் நிலைகளை பற்றியும் சிறிது கவலைப்படாத சமூகத்தை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை நல்வழிப்படுத்தி, சுற்று சூழலை பாதுகாக்க வேண்டியது உங்கள் தலைமையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அல்லவா?<br />
<br />
இந்த படத்தை பாருங்கள்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiukstJE5L2uhjFZERvP8N0MIeVrBcInDwDiijZ44kQ-Eza6iehI0nzszAEePhKvbL0Tpg7nK_eqAdiKduxLrwMXAu7LUXdZylFqzzZg62VRj_IHb9hRv5V2xD2-_PJd0rYM554oAC-LlHu/s1600/Photo0432.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiukstJE5L2uhjFZERvP8N0MIeVrBcInDwDiijZ44kQ-Eza6iehI0nzszAEePhKvbL0Tpg7nK_eqAdiKduxLrwMXAu7LUXdZylFqzzZg62VRj_IHb9hRv5V2xD2-_PJd0rYM554oAC-LlHu/s320/Photo0432.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
இது திருமுக்குளம் என்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் மிக பெருமையுடன் சொன்னார்கள். "என்ன கட்டாந்தரையாக இருக்கிறது. சொட்டு தண்ணீர் கூட இல்லையே?" என்று கேட்டவுடன் தலையை குனிந்து கொண்டார்கள்.<br />
<br />
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
ஶ்ரீவில்லிப்புத்தூரில் வடிகால்களை சீர் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒவ்வொரு நீர்பிடிப்பு பகுதிகளையும் சங்கிலி தொடர்போல இணைத்து நாம் செயல்பட்டால் இந்த திருமுக்குளம் நீர் ததும்பி நிற்கும் அழகை நீங்கள் பார்க்கலாம்.</div>
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
</div>
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
இது சாத்தியமே.<span style="font-family: Tahoma;"><span style="font-family: Latha, sans-serif;"><span style="font-size: x-small;"> </span></span></span></div>
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
</div>
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
<span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஓரிவயல் என்ற
கிராமம் உள்ளது</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">.
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">ராமநாதபுரம்
என்றாலே நம் கண் முன்னால்
வருவது முள்ளு காடுகளும்</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">,
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">கரி
மூட்டங்களும்தான்</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">.
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">ஆனால்
நீங்கள் ஒரிவயல் கிராமத்துக்கு
போனால் அங்கு ஏதோ திருச்சி</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">,
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">தஞ்சாவூர்
டெல்டா பகுதிக்கு வந்துவிட்ட
மாதிரி தோண்றும் </span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">(</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">தற்போது
திருச்சி</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">,
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">தஞ்சாவூர்
டெல்டா பகுதிகள்தான் இராமநாதபுரம்
மாதிரி ஆகிக் கொண்டிருக்கின்றன</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">.) </span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;"></span></div>
<div style="text-align: left;">
</div>
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
<span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">ஒரிவயல்
கிராமத்தில் ஒன்றல்ல இரண்டல்ல</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">,
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">நூற்றுக்கும்
மேலான பண்ணைக் குட்டைகளை
கிரம மக்களே அமைத்திருக்கிறார்கள்</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">.
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">கிராமத்தின்
பொதுவான ஊரணியில்</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">,
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">மழைக்காலம்
தாண்டியும் நீர் ததும்பிக்
கொண்டிருக்கிறது</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">.
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">ஒரு
காலத்தில் கூலி வேலைக்காக
வெளியூர்களுக்கு சென்ற மக்களை
கொண்ட கிராமமாக இருந்த நிலை
போய்</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">,
</span><span style="font-family: Tahoma; font-size: small;"><span style="font-family: Latha, sans-serif;">தற்போது
கூலிக்கு மற்ற இடங்களிலிருந்து
அங்கு ஆட்கள் வருகிறார்கள்</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: small;">.</span></div>
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
<span style="font-family: Latha, sans-serif;"><span style="font-size: x-small;"><span style="font-size: small;">இதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மழை நீர் சேகரிப்பு என்பது என்னவோ கட்டிடங்களில் விழுகின்ற மழைநீரை மண்ணுக்குள் செலுத்துவதில் மட்டும் முடிந்து போகும் ஒரு விஷயம் அல்ல. பெருகும் நீர் எப்படி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சிரமமில்லாமல் வந்தடைய வேண்டும் என்பதாகும்.</span></span></span></div>
<div align="JUSTIFY" style="margin-bottom: 0.08in;">
<span style="font-family: Latha, sans-serif;"><span style="font-size: x-small;"></span></span></div>
ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியின் இனையதளத்துக்கு போனால் அதில் மழைநீர் சேகரிப்பு பற்றி விளக்கவுரைகளும், எவ்வளவு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பட்டிருக்கின்றது என்ற புள்ளிவிவரங்களே சிதறியிருக்கின்றன.<br />
<br />
ஒரு முழுமையான மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால் எப்படி ஒரு நகராட்சி தன் நீராதார சிக்கல்களை தீர்த்துக் கொண்டு, சுற்று சூழல் மாசில்லாமல் ஒரு மாதிரி நகராட்சியாகவும், மற்ற நகராட்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு பயிற்சி களமாகவும் இருக்கும் என்பதற்கு ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியையே ஒரு சோதனை முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம்.<br />
<br />
எனவே, நான் சுருக்கமாக உங்களிடம் வேண்டுவது----<br />
<br />
1. ஶ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டு மழையளவு, வாய்கால்கள் மூலமாக கிடைக்கும் நீர் அளவுகளை கணக்கிடுங்கள்.<br />
<br />
2. அந்த நீர் ஆதாரங்களை எப்படி இயற்கையாக அமைத்துள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சேமிக்கலாம் என்பதற்க்கு ஒரு திட்ட வரைவு தயார் செய்யச் சொல்லுங்கள்.<br />
<br />
3. மக்கள் பங்களிப்போடு நீர் ஆதாரங்களை கெடுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லுங்கள்.<br />
<br />
4. நல்ல நீர் பிடிப்பு வடிகால்களையும் கழிவு நீர் வடிகால்களையும் பிரித்தெடுத்து, கழிவு நீரை சுத்திக்கரிக்கும் நிலையங்களை அமைத்து, கழிவு நீரை சுத்தப்படுத்தி, அவ்வாறு வெளியேறும் நீரை நன்னீர் வடிகால்களுடன் இனைக்க சொல்லுங்கள்.<br />
<br />
5. மக்களிடையே திடக்கழிவு மேலாண்மையை பற்றி விழிப்புனர்வு ஏற்பட்டுத்தி, குப்பைகளால் வடிகால்கள் அடைபடும் அவலத்தை நீக்க வழிவகை செய்யச் சொல்லுங்கள்.<br />
<br />
6. பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அதை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் சாலைகள் போடும் மூலப் பொருட்களாக மாற்றச் சொல்லுங்கள்.<br />
<br />
7. மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து, அதை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக் கொடுங்கள்.<br />
<br />
அப்பறம் என்ன? ஶ்ரீவில்லிப்புத்தூர் ஒரு பூத்துக் குலுங்கும் ஒரு அழகிய நகராட்சியாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. <br />
<br /></div>
மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-87842297483441925942012-09-07T17:09:00.001+05:302012-09-07T17:09:10.458+05:30தங்கத்தில் முதலீடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent">நிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் என்று நினைக்கிறார்கள். அது மிக மிக தவறானது. <br /> <br />
தங்கத்தை பணமாக மாற்றும் போது பாதிக்கு பாதி போய்விடும். எனவே, தங்கத்தை
தங்கமாக வைத்துக் கொண்டு, அதன் மீது கடன் மட்டுமே வாங்க முடியும். இதை
நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. <br /> <br /> பழைய தங்க நகையை போட்டு
புதியது வாங்கும் போது இதேதான் நடக்கிறது. நகை கடைக் காரர்கள்தான் அதிக
லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய வர்கத்துக்கு இது புரிவதில்லை. <br /> <br />
வெறும் விலையை மட்டுமே பார்ப்பது முட்டாள்தனமானது. எந்த பொருளுக்கும் அது
பணமாக மாறும் போது கிடைக்கும் ஈவு தொகையைத்தான் கனக்கிட வேண்டும். <br /> <br />
நீங்கள் எந்த நகைக்கடைகாரர்களிடமாவது அல்லது தங்க காசு விற்கும்
வங்கிகளில் திருப்பி வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள்?
உண்மை நிலை புரியும்.<br /> <br /> குடும்பத்திற்கு எவ்வளவு தங்கம் தேவையோ அதற்கு மேல் வாங்கி வைத்துக் கொள்ளுதல், அவசிய நேரங்களில் சிக்கலை உருவாக்கும்.</span></span></h6>
</div>
மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-74130213966876268772012-09-07T00:48:00.003+05:302012-09-07T00:48:39.426+05:30அமரர் சுஜாதா கொடுக்கும் டிப்ஸ் - இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><div>
<span class="userContent"><div class="text_exposed_root text_exposed" id="id_5048f6b0af34c9b57558920">
<br /> 1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.<br /> <br /> 2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.<br /><div class="text_exposed_show">
<br /> 3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.<br /> <br /> 4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.<br /> <br /> 5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.<br /> <br /> 6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.<br /> <br /> 7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.<br /> <br />
8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ்
வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும். <br /> <br /> 9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.<br /> <br /> 10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.<br /> <br />
இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை
பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும்
நிம்மதியாக இருப்பீர்கள்.<br /> <br /> (நீயா நானா - நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் சொன்னது)</div>
</div>
</span><span class="userContentSecondary"></span></div>
</span></h6>
<span class="uiStreamFooter"><span class="UIActionLinks UIActionLinks_bottom" data-ft="{"tn":"=","type":20}"><button class="like_link stat_elem as_link" data-ft="{"tn":">","type":22}" name="like" title="Like this item" type="submit"><span class="default_message"></span></button></span></span></div>
மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-35071500304987635542012-08-30T22:52:00.002+05:302012-08-30T22:52:18.591+05:30வல்லமையில் எனது சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent"> இந்த கதையின் முடிவு, ஒரு சில பேருக்கு கொஞ்சம்
அதிர்ச்சியாக இருக்கும். ஒரு சில பெண்கள் இது போன்ற முடிவு எடுத்ததாக
செய்தி தாள்களில் வந்திருக்கின்றன. <br /> <br /> <a href="http://www.vallamai.com/literature/short-stories/25244/" rel="nofollow nofollow" target="_blank">http://www.vallamai.com/literature/short-stories/25244/</a><span class="wrc0" style="height: 16px; padding-right: 16px; width: 16px;"></span></span></span></h6>
</div>
மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-72962579148660214292012-08-09T22:13:00.003+05:302012-08-09T22:13:45.439+05:302014ஐ பற்றி இப்போதே யோசிப்போம் - 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><br />
TINA Factor என்று அரசியல் பார்வையாளர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
அதில்தான் காங்கிரசஸ் ரொம்பவும் நம்பியிருக்கிறது. 2014ல் எப்படியும்
மீண்டு வந்து விடுவோம். இதே மாதிரி கல்லா கட்டுவதை தொடராலாம் என்று தெம்பாக
இருக்கிறார்கள். அதாவது There is no alternative (TINA).
கம்யூனிஸ்டுகளும் சரி, பல மாநில கட்சிகளும் சரி தங்கள் அரசியல்
வாழ்வுரிமைக்காக பாஜாகவை எதிர்த்து செயல்பட வைக்கிறது. குறைந்த பட்சம்
பாஜகாவை ஆதரிக்காமல் எட்டி நிற்கின்றன. மதவாத தீட்டு பட்டுவிடும் என்றும்
அதனால் தங்கள் ஓட்டுகள் சரிந்துவிடும் என்று கவலை படுகின்றன. பாஜகவால்
தனித்தும், சில மாநில கட்சிகளின் ஆதரவோடும் பெரும்பான்மை எடுத்துவிட
முடியாது. எனவே குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பாஜாக
ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் காங்கிரஸ்
வந்து விடும். இது 2004ல் அவர்கள் பெற்ற வெற்றி மாதிரி இருக்கும்.
ஆளாளுக்கு காங்கிரஸை மிரட்டுவார்கள். ஆனால் கவிழ்த்து விட மாட்டார்கள்.
காங்கிரசும் ரொம்ப பயந்த மாதிரி காட்டிக் கொண்டு தங்கள் கொள்ளையை தொடரும்.
இந்த அவலநிலை இந்தியாவுக்கு நல்லதல்ல. அவ்வளவுதான் தற்போதைக்கு சொல்ல
முடியும். கெடுதலை பற்றி நன்றாக புரிந்து கொண்டால நல்லதை நோக்கி மனசு
நகரும்.</span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-10921984052006787622012-08-09T14:21:00.002+05:302012-08-09T14:21:45.859+05:30கல்வி தந்தைகள் கற்றுத் தரும் பாடம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு பொறியியல் கல்லூரி கட்டும் கட்டிடம் இடிந்து விழுகிறது என்றால் இவர்களின் கல்வித்தரம் எந்த லட்சனத்திலி இருக்கும் என்பது தெரிகிறது. இந்த மாதிரி காசு சம்பாரிப்பதற்கு மட்டுமே கடை விரிக்கும் இந்த மௌள்ளமாறி/முடிச்சவிக்கி கல்வி தந்தைகளை என்ன செய்தால் நாடு உருப்படும்?</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-21040710687195189742012-08-05T13:40:00.002+05:302012-08-05T13:40:15.478+05:30கானாமல் போன காட்சிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எம்.ஜி.ஆர். படங்களில் கனவு காட்சி என்று எப்போதும் உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள் மட்டுமே ஈஸ்ட்மென் கலரில் வரும். மற்றவையெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள். அதிலும் அந்த கனவு காட்சிகள் அள்ளி அள்ளி கொட்டும் வண்ணங்களில் கதாநாயகியின் கவர்சியில், நல்ல மெல்லிசையில் பிரமாதமாக இருக்கும். அதில் சிகரமாக நான் கருதுவது உரிமைக் குரல் படத்தில் வரும் விழியே கதை எழுது என்ற கனவு காட்சி பாடல்தான். அதில் முன்பு சொன்ன மூன்றும் தூக்கலாக இருக்கும். மீனவ நண்பனில் தங்கத்தில் முகமெடுத்து, நேற்று இன்று நாளையில் அங்கே வருவது யாரோ... இது போன்ற பல பாடல்கள்.<br /><br />அப்போது பல விஷயங்கள் அரிதாக இருந்தன. விழியே கதை எழுது பாடலை கேட்க வேண்டுமானால் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். திடீரென இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை இரண்டில் உரிமைக்குரல் என்று அறிவித்ததும் அது விழியே கதை எழுது பாடலாக இருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும். இந்தியா கிரிக்கெட்டில் காலை வாருவது மாதிரி நம் எண்ணங்களுக்கு எதிர் மாராக பொண்ணா பொறந்தா ஆம்பிளை கிட்டே... என்று வேறு பாடல் வந்து விடும். தூர்தர்ஷனில் விழியே கதை எழுது வரவேண்டுமென்றால் அது அத்தி பூத்த மாதிரிதான்.<br /><br />ஆனால் இன்று அப்படியல்ல. கூகுள் சர்ச்சில் போய் விழியே கதை எழுது என்று டைப் செய்தால், எம்.ஜி.ஆரும் லதாவும் நமக்காக ஆயிரம் முறை லவ்வுகிறார்கள்.<br /><br />நான் கல்லூரி படித்த காலத்தில் எனது நண்பன் சேகர் என்பவருக்கு ஒரு தியேட்டர் குத்தகையில் இருந்தது. தஞ்சாவூர் பஸ்டாண்ட் அருகில் ( தற்போது இது பழைய பஸ்டாண்ட்) திருவள்ளுவர் என்ற தியேட்டர் உள்ளது. அதில் புரொஜெக்டர் ரூமுக்கு அருகில் உள்ள ரூமில் அவன் தங்கியிருந்தான். ஒரு முறை உரிமைக்குரல் அந்த திரையரங்கில் வெளியாகியது. சரியாக 7.10 க்கு அந்த பாடல் வரும். கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அந்த சமயத்தில் போய் அந்த பாடலை மட்டும் பார்த்துவிட்டு ஏதோ சந்திரனில் காலடி வைத்து விட்டு வந்த மாதிரி பெருமிதப்பட்டிருக்கிறேன்.<br /><br />வசதிகள் குறைவாக இருந்த காலங்களில் சந்தோஷங்கள் அதிகமாக இருந்தன.</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-56968250429297025912012-07-31T22:50:00.002+05:302012-07-31T22:50:35.722+05:30கனிம கூட்டுக் கொள்ளை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}">மதுரை
மாவட்டத்தில் கனிம வளங்களை திருடியது 16000 கோடி என்று உத்தேசமாக
சொல்லியிருக்கிறார்கள். இந்த திருட்டை செய்த கம்பனிகள், அவையோடு தொடர்ப்பு
கொண்ட அரசு அலுவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்கை பார்த்து,
அவர்கள் வருமானத்து மேல் சேர்ந்திருந்தால் அதை பறிமுதல் செய்ய வேண்டும்.
என்னுடைய அனுமானப்படி அவர்கள் வருமான வரியே கட்டியிருக்க மாட்டார்கள். வெகு
இலகுவாக உள்ளே பிடித்து போடமுடியும். <br /> <br /> இந்த அரசு செய்யுமா? அல்லது <br /> <br />
ஸ்பெக்ட்ரம் கேஸை தன் நேரடி கவனிப்பில் வைத்துக் கொண்ட மாதிரி உயர் நீதி
மன்றம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சாட்டையை சுழற்றுமா?<br /> <br /> இந்த
கூட்டுக் கொள்ளையில் எவ்வனாவது ஒருவன் இன்னும் ஒரு மாசத்தில் ஜெயிலில்
போய் களி சாப்பிட்டான் என்றால், ஜனநாயகம் வாழ்கிறது என்று மகிழ்ந்து, ஒரு
பிடி சக்கரையை வாயில் போட்டுக் கொள்வேன்.</span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-68199411321077584322012-07-31T11:26:00.001+05:302012-07-31T11:26:24.363+05:30சொத்து சேர்க்கும் டிரஸ்டுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><div class="text_exposed_root text_exposed" id="id_5017731d30c099b59733881">
டிரஸ்ட்
சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பல அமைப்புகளை கோடி கோடியாக சொத்துக்கள்
வைத்திருக்கின்றன. எந்த உயரிய நோக்கத்துக்காக அந்த டிரஸ்ட்
உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் அடுத்த தலைமுறையில் கானாமல் போய்விடுகிறது.
வாரிசு சண்டைகள் உருவாகின்றன. டிரஸ்ட் என்பதே ஒரு பொது நலனுக்கான பொது
சொத்து. அதில் வாரிசு உரிமை என்பதே கேவலமாக படுகிறது.<br /> <br /> இன்று பல
டிரஸ்டுகள் ஒரு தனியார் நிறுவனம் போல செயல்படுகின்றன. தென் சென்னையில்
முப்பாத்தம்மன் கோயில் அருகில் இருக்கும் ஒரு சபாவின் செயலாளர்
காலமாகியதும் அதன் அடுத்த செயலாளராக அவர் மகன்தான் வந்தார். இது போல பல
டிரஸ்டுகளில் வாரிசுரிமை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தான் சேர்த்து
வைத்ததை தன் வாரிசுக்கு கொடுக்கும் குறுகிய எண்ணம் கொண்டவர்கள்தான் இந்த
டிரஸ்டுகளின் முதலாளிகள் (!!!!!).<br /> <br /> சொத்து சேர்த்து வைத்துவிட்டு
அந்த தலைவர் போனதும், கீழ் மட்டத்தில் குடுமிபிடி சண்டைகள் வருகின்றன.
சித்தாந்தத்தில் வேறுபாடுகள் வரலாம் என்ற கருத்துக்கு இடமே இல்லை. தலைவன்
கருத்தை சரியாக புரிந்து கொள்ளாத போதுதான் சித்தாந்த புரிதலில் இரண்டை நிலை
ஏற்படுகி<span class="text_exposed_show">றது. உண்மையில் அது நானா நீயா என்ற ஈகோ பிரச்சனைதான். அடுத்து சொத்து ஆளுமையில் சண்டை வருகிறது.<br /> <br />
இப்படித்தான் பெரியார் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள் சண்டை வந்தது.
இன்று பெரியார் சொத்து முழுவதும் ஒருவர் ஆளுமையில் வந்துவிட்டது. இனி
அவர், தன் காலத்துக்கு பிறகு யாரிடம் ஒப்படைக்க போகிறார் என்பதை காலம்
நிச்சயம் பதிவு செய்யும். அது அவர் வாரிசுக்கு போய்விட்டால், முன்னே சொன்ன
சென்னை சபாவுக்கும் அதற்கும் வித்தியாசம் இருக்காது.<br /> <br /> ஆழியார்
வேதாத்ரி மகரிஷ் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள்ளும் சண்டை வந்தது.
ராம்யோகி சுரத்குமார் மடத்தில் ஒரு சிலர் ஓரம் கட்டப்பட்டனர். ஏன்,
ஆரோவில்லில் கூட பெங்காலி கோஷ்டிகளுக்கும், தமிழ் கோஷ்டிகளுக்கும்
மௌனயுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. <br /> <br /> இஸ்கானில் சண்டை.
செங்கல்வராயன் டிரஸ்டில் சண்டை. இது போல சொத்துக்கள் சேர சேர சிக்கல்கள்
அதிகமாகி கொண்டே போகிறது. சொத்துக்கள் இல்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு
அந்த சித்தாந்தத்துக்கே மூடுவிழா.<br /> <br /> ஒரு முறை காஞ்சி மஹா பெரியவரை
ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பழங்கள் வாங்கிக் கொண்டும்
போயிருந்தார். பெரியவர் அந்த பழங்களை அங்கிருப்பவர்களிடம் பிரசாதமாக
ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டார். வந்தவர், "இந்த மடத்துக்கு எதாவது
செய்யட்டுமா?" என்று கேட்டாராம். உடனே பெரியவர், "ஆபீஸில் ஏதோ தேவை என்று
சொன்னார்கள்.போய் பாருங்கள்" என்றாராம். ஆபீஸில் விசாரித்தால் அவர்கள் சில
கடிதங்களுக்கு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றார்களாம். அதை வாங்கிக்
கொடுத்துவிட்டு, திருப்தியடையாமல் மீண்டும் பெரியவரிடம் வந்து இன்னும்
பெரிசாக ஏதாவது செய்யட்டுமா? என்று கேட்டாராம். "இல்லை. இது போதும். எப்ப
வேனுமோ, அப்ப யாராவது வருவா. அவா கொடுப்பா. நீங்க ஏதாவது செய்ணும்னா
நீங்களே நேரடியாக மக்களுக்கு செஞ்சுடுங்கோ" என்றாராம். <br /> <br /> இந்த உண்மையான ஜகத்குருவுக்கு இருந்த சிந்தனை இன்று பெரும்பாலான கார்பரேட் சாமியார்களிடம் இல்லை. இதில் காஞ்சி மடமும் விதிவிலகல்ல.</span><span class="uiStreamFooter"></span></div>
</span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-38972736756743603412012-07-30T15:43:00.000+05:302012-07-30T15:43:03.465+05:30மது விலக்கு - அம்மாவுக்கு என் ஆலோசனைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}">
1. மஹாராஷ்ட்டிராவில் ஒரு மது கொள்கை இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட
பகுதியில் மதுக் கடை இருப்பது மக்களுக்கு இடைஞ்சலாக, சமூக சிக்கல்களை
உருவாக்கக் கூடிய வகையில் இருந்தால், அதை அரசு ஆராய்ந்து அந்த மது கடைகளை
மூடிவிடுகிறது. அந்த நடைமுறையை ஆகஸ்ட் - 15ம் தேதியிலிருந்து துவக்கலாம்.
காலாண்டுக்கு (குவாட்டருக்கு!!!) 10% மது கடைகளுக்கு உச்ச வரம்பு வைத்து
குறைத்துக் கொண்டே வரலாம்.<br /> <br /> 2. பீர்/விஸ்கிக்கு மாற்றாக அரசே மதுக்
கடைகள் மூலமாக கள் வியாபாரம் சில காலங்களுக்கு செய்யலாம். இது கள்ள
சாராயத்தை பெருமளவு குறைக்க உதவும்.<br /><span class="text_exposed_show"> <br />
3. கேரளாவில் மதுக் கடைகளில் பார் இனைப்பு இல்லை. எனவே, பார்களை ஒட்டு
மொத்தமாக மூடிவிட வேண்டும். இந்த கரை வேட்டிகள் இங்குதான்
கொள்ளையடிக்கிறார்கள்.<br /> <br /> 4. பொது இடங்களில் மது அருந்துவது
முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். இதில் பல நண்மைகள் இருக்கின்றன.
வீட்டில் போய் குடிக்க பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். இரண்டாவது,
குடித்துவிட்டு வண்டி ஓட்டும் கூட்டம் குறையும். விபத்துகள் தவிர்க்கப்
படும்.<br /> <br /> 5. கண்கானிக்கக் கூடிய காவலர்கள் ஏதாவது கையூட்டு பெற்று,
புதிய திட்டத்தை குளறுபடி செய்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில்
போடப்படுவார்கள் என்ற உத்திரவு வர வேண்டும்.<br /> <br /> 6. மிடா குடியர்களை குடியிலிருந்து மீட்க மாவட்டம் தோறும் மருத்துவ முகாம்கள் உருவாககப் பட வேண்டும்.<br /> <br /> இதை அத்தனையையும் அம்மா செய்தால், நான் நிச்சயமாக, பகிரங்கமாக அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவேன். அதை பெருமையா நினைப்பேன்.</span></span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-31776272632720359912012-07-30T15:21:00.002+05:302012-07-30T15:21:54.860+05:30தேவை ஒரு வடிகட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span>ஒரு
முறை காஞ்சி மஹா பெரியவருக்கு கண்புரை நீக்கம் செய்யப்பட்டதாம். அதை
முடித்து வைத்தவுடன் அந்த மருத்துவர், "இனி நான் என்ன செய்யட்டும்" என்று
கேட்ட்டாராம். எனக்கு கெடைச்ச இந்த மாதிரி மருத்துவப் பணி காசு இல்லாம
இருக்கிற பல ஏழைகளுக்கு கிடைக்கனும். உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு
பண்ணு என்று சொன்னாராம். </span></span></h6>
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span>அவர் ஜகத்குரு. அவர் ஒன்று என்றால் இப்போது
இருப்பதெல்லாம் பூஜ்ஜியங்கள். கண்தானம் செய்தால் மோட்சம் கிடைக்காது என்பது போன்ற உளரல்கள் வருகின்றன.</span></span></h6>
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span> இது போல பழமைவாத குணங்கள் பல போப்புகளிடமும்/</span><wbr></wbr><span class="word_break"></span>முல்லாக்களிடமும் இருக்கின்றன. நாம்தான் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.</span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-77514322381930588302012-07-29T15:08:00.000+05:302012-07-29T15:08:01.985+05:30தமிழக அரசின் பார்வையில் ஒரு மாற்றம் தேவை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><br />
முதலாவது குடியர்களை ஒரு வாடிக்கையாளர் என்று பார்ப்பது தவறு. அரசு லாபம்
சாம்பாதிக்க டாஸ்மாக் கடைகளை திறக்கவில்லை. எனவே சமூக அக்கறை கொண்ட எந்த
ஒரு அரசும், இந்த மாதிரியான ஒரு கூட்டம் குறைய வேண்டும் என்பதாகதான் இருக்க
வேண்டும்.<br /> <br /> இரண்டாவது, அதிகமாக குடித்து தெருவில் மட்டையாகி
கிடக்கும் குடியர்களை இந்த சமூகம் வெறுக்க கூடாது. அரசு அவர்களை நோயாளிகளாக
பாவித்து அவர்களை குடியின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.<br /> <br /> ஒரு பெண்னை தலைமை பொறுப்பில் கொண்ட இந்த அரசு செய்யுமா?</span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-91778522434910885242012-07-28T00:14:00.001+05:302012-07-28T00:14:19.714+05:30தேவை ஒரு ரண சிகிச்சை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}">தாம்பரம்
முடிச்சூர் சியோன் பள்ளி துயர சம்பவத்திற்கு பிறகு, எல்லா தனியார்
பள்ளிகளையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதை ஒரு
பக்கம் பார்த்தால் சரி என்றே படும். ஆனால் நிர்வகிக்க லாயக்கில்லாத கல்வி
துறையால் ஒட்டுமொத்த சீரழிவே ஏற்படும். மக்களே விரும்ப மாட்டார்கள். <br /> <br />
தனியார் கல்வி நிலையங்கள் மலைமுழுங்கிகளாக இருந்தாலும் மக்கள் அதை நோக்கி
இன்னமும் போகிறார்கள் என்றால் அதில் காரணம் இருக்கிறது. அரசு பள்ளிகளில்
உள்கடமைப்பு குறைபாடுகள் இருக்கின்றன. ஆசிரியர்களை கட்டுப்படுத்த
முடியவில்லை. <br /> <br /> அப்படியென்றால் என்னதான் தீர்வு? எனக்கு தோன்றிய சில கருத்துக்களை தெரிவிக்கிறேன். அரசு இதை அறிமுகப்படுத்தலாம்.<br /><span class="text_exposed_show"> <br />
1. முதலில் கல்வி நிலையங்களில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் காசோலை
மூல்மாதான் நடக்க வேண்டும். உள்ளே வரும் பணம், வெளியே போகும் பணம்
அனைத்தும் வங்கி கணக்குகள் மூலமாகத்தான் போக வேண்டும். ஜனவரி மாதம்
தொடங்கி ஜூலை மாதம் வரை பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியும்
கண்கானிக்கப்பட வேண்டும். <br /> <br /> 2. பள்ளிகளின் அனைத்து சொத்து
வளர்ச்சிகளும் இந்த வங்கி கணக்கோடு இனைத்து பார்க்க வேண்டும். கணக்குகளில்
வராத எந்த புதிய சொத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்
இரண்டாம் கணக்கு (இரண்டாம் பில் புக்) வைத்து பணம் வாங்கும் வழக்கம்
அடியோடு ஓய்ந்து போகும்.<br /> <br /> 3. பள்ளிகள் அனைத்தும் டிரஸ்ட்
சட்டத்தில் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சதவிகதத்திற்கு மேல் இலாபம் வந்தால்
அது முதலமைச்சர் பொது நிதிக்கு மாற்றப்படும் என்ற அதிரடி உத்திரவை அரசு
போட வேண்டும். <br /> <br /> 4. கல்வித் துறையிலிருந்து ஒரு நபர், பெற்றோர்
குழுமத்திலிருந்து ஒரு நபர், ஆசிரியர்களிருந்து ஒரு நபர், ஒரு சமூக ஆர்வலர்
என்ற தொடர் கண்கானிப்பு குழுவை அமர்த்தலாம். <br /> <br /> 4. கடுமையான
தணிக்கை, கடுமையான கண்கானிப்பு இருந்தால் கல்வி கொள்ளையர்கள், போதும்டா
சாமி, இனிமேல் இதில் சம்பாதிக்க முடியாது என்று கஞ்சா காய்ச
போய்விடுவார்கள். கல்வித்துறை பிழைக்கும்.<br /><span> </span></span></span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-15011864165198055642012-07-27T20:24:00.003+05:302012-07-27T20:24:28.039+05:30கல்வியும் சாராயமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}">ஒரு டி.வி. நிகழ்ச்சியில் ஒருவர் சொன்னது.<br /> <br />
முன்பெல்லாம் அரசாங்கம் கல்வியை கொடுத்தது. ரௌடிகள் சாராயம் விற்றார்கள்.
தற்போது அந்த ரௌடிகள் கல்வித் தந்தைகளாகிவிட்டார்கள். அரசாங்கம் சாராயம்
விற்கிறது. <br /> <br /> தமிழக அரசுக்கு வெட்கம்/மானம்/சூடு/சொரனை எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். <br /> <br /> இதில் தாத்தாவும், அம்மாவும் ஒரே கட்சி.</span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-60466879217146554572012-07-27T14:07:00.002+05:302012-07-27T14:07:32.877+05:30களவானிகள் ஜாக்கிரதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}">சமீபத்தில்
சென்னை சென்றிருந்தேன். ஒரு அரசியல் நண்பரை சந்தித்தேன். முதலமைச்சர்
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை கடிந்து கொண்டது பற்றி பேச்சு
திரும்பியது. ஒரு கவுன்சிலர் இப்படி சொன்னாராம். " நாங்கெல்லாம் என்ன சமூக
சேவை செய்யவா அரசியலுக்கு வந்திருக்கோம். முப்பது லட்டச ரூபா முதல் போட்டு
இந்த சீட் போட்டு இன்னும் அது மாதிரி ரெண்டு பங்கு செலவழிச்சு
வந்திருக்கேன். போட்ட காசுக்கும் மேல ரெண்டு மடங்கு எடுத்தாத்தானே அடுத்த
எலக்ஷனுக்கு தேவையா இருக்கும். இந்த கணக்கு அம்மாவுக்கு புரியாம என்னவோ
பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்க அரசியல் அப்படி. என் அரசியல் இப்படி"<br /> <br />
இது எப்படி இருக்கு. தி.மு.க போய் அ.தி.மு.க. வந்தாலும் அல்லது
இரண்டுக்கும் மாற்றாக தே.மு.தி.க. அல்லது பா.ம.க. அல்லது ம.தி.மு.க என்று
யோசித்தாலும் களவானிகள் எப்படியும் எங்கும் இருப்பார்கள்.<br /> <br /> ஆண்டவா. என்ன இது நம் நாட்டுக்கு வந்த சோதனை.</span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-3937751977245783682012-07-27T00:04:00.002+05:302012-07-27T00:04:31.256+05:30தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}"><br />
வணக்கம். இந்த கடிதம் எழுதும் சமயத்தில் மனசு கனத்துப் போயிருக்கிறது.
உணர்ச்சி கொந்தளிப்பை கொஞ்சம் அடக்கி அறிவு பூர்வமாக ஒரு சில கருத்துக்களை
சொல்ல விழைகிறேன்.<br /> <br /> தமிழக அரசு அதிகார வர்கத்தில் லஞ்சம் என்பது
இரண்டற கலந்து விட்ட ஒரு விஷம் என்பது ஒரு ஊரரிந்த ரகசியம். அதை நான்
சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.<br /> <br />
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நேற்று தாம்பரம் முடிச்சூர் சாலையில்
உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு சின்னஞ்சிறு மழலை பலியாக யார்
காரணம்? ஒரு குழந்தை உள்ள விழும் அளவுக்கு ஓட்டை உள்ள ஒரு வண்டிக்கு தகுதி
சான்று கொடுக்கும் தைரியம் எப்படி ஒரு போக்குவரத்து ஆய்வாளருக்கு வந்தது?
குழந்தை உயிர் பறிபோனது தெரிந்தும் கூட எங்களுக்கு அந்த துயர சம்பவத்தில்
நேரடி பொறுப்பில்லை என்று சொல்ல சொல்ல ஒரு தாளாளருக்கு எப்படி ஒரு தைரியம்
வருகிறது? மக்கள் இப்படி கொஞ்ச நாட்கள் கத்தி கதறுவார்கள், அதன் பிறகு நாம்
மீண்டும் கூட்டுக் கொள்ளையை தொடரலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும்
அளிக்கும் அந்த அதிகார சக்தியின் வீர்யம் எங்கிருக்கிறது?<br /> <br /> நான் உங்களை ஒரு மக்களின் காப்பாளராக பார்க்கிறேன். புரையோடி போயிருக்கும் இந்த மலினங்களை எப்படி கவனிக்காமல் இருந்து விட முடியும்?<br /> <br />
இந்த வார விகடனில் போலீஸ் துறையை பற்றிய விரிவான அலசல் வந்திருக்கிறது.
மக்களை காக்க வேண்டிய போலீஸ் துறை எப்படி மக்களிடமிருந்து
கொள்ளையடிக்கிறார்கள் என்பதை தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது.
உண்மையான திருடர்கள் போலீஸ் அல்லவா? போலீஸ் அதிகாரிகளுக்குள் லஞ்சம்
பிரிப்பதில் தகராறு வந்து கட்டிபுரண்டு சண்டையிட்டார்கள் என்ற செய்தி சில
நாட்கள் முன்னால் செய்திதாள்களில் வந்தது. இதுவும் ஒரு சோறு பதம்தான். இதை
வேறோடு பிடுங்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?<br /> <br /> உங்கள்
உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையான ஒரு சிலரை வைத்து நான் தரும் இந்த
துறைகளில் ஒரு சர்வே எடுங்கள். உங்களுக்கு சீழ் பிடித்து போன அதிகாரத்
துறையின் லட்ச்சனம் புரியும்:<br /> <br /> 1. பத்திர பதிவு துறை<br /> <br /> 2. பொது பணித்துறை<br /> <br /> 3. வட்டார போக்குவரத்து துறை<br /> <br /> 4. வருவாய் துறை<br /> <br /> 5. அரசு பொது மருத்துவ மனைகள்<br /> <br />
இந்த பட்டியல் ஏதோ ஒரு எடுத்துக் காட்டுக்குதான். கான்சர் உடம்பு முழுவது
பரவிட்ட மாதிரி அனைத்து துறைகளிலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இது இந்த
ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லாமல் எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருக்கிறது.<br /> <br /> இங்கு மக்கள் படும் பாட்டை விட
அரசுக்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு அரசு அதிகார வர்கத்து
பாக்கெட்டுகளில் போய்விடுகிறது என்ற உண்மையும் புரியும்.<br /> <br /> எனக்கு தெரிந்த எளிய சிறு வழி முறைகளை சொல்ல விரும்புகிறேன். <br /> <br />
1. நீங்கள் சட்ட சபையில் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை
விடவேண்டும். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என்று தெள்ள தெளிவாக
ஆனித்தரமாக தெரிவிக்க வேண்டும். <br /> <br /> 2. அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளை தவிர அங்கும் இங்கும் அலையும் புரோக்கர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.<br /> <br /> 3. ஒரு துறையிலும் நுழைவாயிலில் ஒரு வரவேறபறை உருவாக்கி வரும் பொதுமக்களுக்கு லஞ்சமில்லா உதவிகள் செய்ய வேண்டும்.<br /> <br />
4. லஞ்சம் வாங்குவோரை கையும் களவமாக பிடிக்க சிறப்பு படைகளை உருவாக்க
வேண்டும். மக்கள் வந்து புகார் கொடுத்தால்தான் என்று இல்லாமல்
சந்தேகப்படும் நபர்களை பொறிவைத்து பிடிக்கும் தனிப்படைகளை உருவாக்க
வேண்டும்.<br /> <br /> 5. அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு, அதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்ய வேண்டும். <br /> <br />
6. பொது மக்களுக்கு லஞ்சம் பற்றிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க 'தபால் தலை
இல்லா - அனுப்புனர் முகவரி இல்லா' கடிதங்களை வரவேற்க வேண்டும். தகுந்த
தபால் தலை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.<br /> <br /> 7. மக்கள் தைரியமாக லஞ்ச தகவல்களை தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் ஒரு பெட்டி வைக்க வேண்டும்.<br /> <br />
8. 100, 108 மாதிரி மிக எளிதாக மனதில் வைக்கும் படியாக ஒரு தொலைபேசி எண்ணை
லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கி அதை செய்தி தாள்களில் அறிவிக்க வேண்டும்.<br /> <br /> இது மாதிரி ஒரு போரை துவங்குங்கள். மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம் இருப்பார்கள்.<br /> <br /><br /> </span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-57859593787456414932012-07-25T00:05:00.000+05:302012-07-27T10:12:28.773+05:30ஜீவ - மரணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="statusUnit">
<div class="-cx-PRIVATE-fbTimelineText__featured">
<div class="text_exposed_root text_exposed" id="id_500eea9d9a4573c46392268">
மூக்கில் பஞ்சை வைத்து<br />
நெற்றியில் ஒற்றை காசும் வைத்து<br />
கொண்டு போனார்கள் கலியனை<br />
<br />
மத்தள முழக்கத்தில்<br />
மப்பின் உச்சத்தில் <br />
குதியாட்டம் போட்டன<br />
கிஷ்கிந்தர்கள் கூட்டம்<br />
<span class="text_exposed_show"> <br /> மூத்த தலைமுறையை மறந்திடாமல்<br /> மலர் மாலைகளை பிய்த்து பிய்த்து<br /> சாலையெங்கும் குப்பையாக்கியது<br /> இன்னொரு கூட்டம்<br /> <br /> சிதறிய மாலை துணுக்குகளுக்கு<br /> ஓடி வந்தன ஆடுகள் கூட்டம்<br /> தன் சுற்றமும் நட்பையும்<br /> கொன்று தின்ற கலியன் மீது கோபம் கொண்டு<br /> அத்தனையையும் தின்று தீர்த்தன ஆடுகள்.<br /> <br /> ஆனால் அவைகள் முட்டாள் ஆடுகள்<br /> ஆடு மாதிரியே வாழ்ந்துவிட்டு போன<br /> கலியனின் கருமாதி விருந்துக்கு<br /> உணவாகப் போவதை அறியாத <br /> முட்டாள் ஜீவன்கள்.</span></div>
</div>
</div>
<span class="UIActionLinks UIActionLinks_bottom" data-ft="{"tn":"=","type":20}"><button class="like_link stat_elem as_link" data-ft="{"tn":">","type":22}" name="like" title="Like this item" type="submit"><span class="default_message"></span></button></span></div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-23655881259413298932012-07-25T00:03:00.003+05:302012-07-25T00:03:57.448+05:30இசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="statusUnit">
<div class="-cx-PRIVATE-fbTimelineText__featured">
<div class="text_exposed_root text_exposed" id="id_500eea54c49bb0102197553">
இசை
ஒரு போதை என்பார்கள். அதனால்தான் தீவிர இஸ்லாமியர்கள் இசையை மறுக்கும் ஒரு
மார்க்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே இஸ்லாத்தில்த்ஆன் சுஃபி இசை
என்ற உன்னத இசை வெளிப்பட்டது.<br /> <br /> எனக்கு இசை ரொம்பவும் பிடிக்கும். காரணம் அவை வெறும் ஒலிக் கோர்வைகளாக இல்லாமல் நம் வாழ்வில் இரண்டற கலந்து விடுகின்றன.<br /> <br /> நிறம் மாறத பூக்கள் படத்தின் ஆயிரம் மலர்களே பாடல்களின் ஆரம்ப இசையை கேட்டாலே என்னை மறந்து அழுது விடுவேன். அது<span class="text_exposed_show"> என் இளமை கால இனிய நண்பனை (வெங்கட கிருஷ்ணனை) நினைவூட்டும்.<br /> <br />
உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை என்ற பாடல் என் வாழ்க்கை ஒரு
அர்த்தமாக விளங்கிய என் சித்தியை (ரேவதி - என் அப்பாவின் தம்பி மனைவி)
ஞாபகத்திற்கு கொண்டு வரும். தற்போது அவர்கள் இந்த பூவுலகில் இல்லை. ஆனால்
என் நெஞ்சில் எப்போது இருக்கிறார்கள். ஓரளவுக்கு சுருதி சுத்தமாக
பாடுவார்கள். அவர்கள் பாடி பல முறை நான் கேட்டிருக்கிறேன். ' உன் நெஞ்சிலே
ஓரம், எதற்காகவோ ஈரம்' ... அந்த வரிகள் என்னை துன்புறுத்தினாலும் அதில்
நான் மகிழ்ச்சியடைகிறேன்.<br /> <br /> மனசு ஒன்று இருப்பதால்தான் இசை என்பது
ஏற்றம் பெறுகிறது. திரை இசை என்பது மட்டுமே இசையல்ல. பாவயாமி கோபாலம் என்ற
பாடலை எம்.எஸ். குரலில் கேட்க்கும் போது நான் எங்கோ ஒரு மோன நிலைக்கு
போய்விடுகிறோம். ஒரு ராக ஆலாபனை தொடங்கிவிட்டால் அது என்ன ராகம் என்று
கண்டுபிடிக்க மனசு பேயாய் அலைகிறது. அதில் வரும் நெளிவு சுளிவுகளை நெஞ்சுக்
கூட்டுக்குள் நிறுத்தி வைத்து, சபாஷ் போட வைக்கிறது.<br /> <br /> இந்தி கஸல்
பாடல்கள் இன்னொரு மாதிரியானவை. ஒரு பித்து நிலைக்கு நம்மை கொண்டு போகும்.
அவர்கள் கம்பியில் இசையை இழைக்கும் போது அது நரம்பில் இசைப்பது
போலிருக்கும்.<br /> <br /> வெறும் பக்தி இசையையே கேட்டுக் கொண்டிருந்தவர்க்களை
சினிமா இசையின் பக்கம் திரும்ப வைத்தவர் எம்.எஸ்.வி. வெறும் இந்தி
பாடல்களேயே கேட்டுக் கொண்டிருந்தவர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திரும்ப
வைத்தவர் இளையராஜா. கடைக்கோடி தமிழன் சுவாசிக்கும் இசையை அந்த மண்ணின்
மணத்தோடு பரிமாரியவர் இளையராஜா. எம்.எஸ்.வி. கூட கர்நாட ஸ்வர சந்தங்களை
பாடலில் கொண்டுவர தயங்கிய போது அதை பாமரன் கூடு ரசிக்கும் வகையில்
தைரியாமாக கையாண்டவர் இளையராஜா.<br /> <br /> இந்திகாரர்கள் கூட தமிழ் பாடல்களை
கேட்க்கும் படி செய்தவர், ஏ.ஆர். ரஹ்மான். இளையராஜா சிம்பனிகளை தமிழ்
பாடல்களில் ப்யூஷன் செய்தார் என்றால், ஏ.ஆர்.ரஹ்மான் உலக இசைகளை, குறிப்பாக
சூஃபி பாடல்களை இந்திய மொழிகளுக்கு கொண்டு வந்தார். அதனால்தான் அவரால்
உலக இசையை வெல்ல முடிந்தது. ஒரு தமிழனுக்கு ஆஸ்கார் கிடைத்தது.<br /> <br /> இசை என்னோடு எப்போதும் பயணித்து கொண்டே இருக்கும். காரணம், என் சுவாச காற்றில் இசை கலந்திருக்கிறது.</span></div>
</div>
</div>
<span class="UIActionLinks UIActionLinks_bottom" data-ft="{"tn":"=","type":20}"><button class="like_link stat_elem as_link" data-ft="{"tn":">","type":22}" name="like" title="Like this item" type="submit"><span class="default_message"></span></button></span></div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-57885131766921639702012-07-25T00:02:00.003+05:302012-07-25T00:02:43.461+05:30நீர் மேலாண்மை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="statusUnit">
<div class="-cx-PRIVATE-fbTimelineText__featured">
<div class="text_exposed_root text_exposed" id="id_500eea06e9d9f5a72048619">
ஒரு கிராமத்தின் நீர் மேலாண்மை செய்ய வேண்டும் என்றால் முதன் முதலாக அந்த
கிராமத்தில் மழை காலத்தில் நீரின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை அவதானிக்க
வேண்டும். அந்த வேகம் எங்கே கூடுகிறது? எங்கே மட்டு படுகிறது? எங்கே
தேங்குகிறது ? எங்கு மண்ணுக்குள் செல்லுகிறது என்பதை துல்லியமாக தெரிந்து
கொள்ள வேண்டும். அடுத்து, அளவு - நேரடி மழை நீராக எவ்வளவு? ஆற்று வாய்கால்
வழியாக எவ்வளவு? என்பதையும் குறித<span class="text_exposed_show">்துக்
கொள்ள வேண்டும். அடுத்து, நீர் தேக்கும் கட்டமைப்புகள் - எவ்வளவு
இருக்கின்றன? அதன் கொள்ளவு என்ன? என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இனி
வருவது, நம் தேவை என்ன? அதை எவ்வாறு அடைவது? முதலில் சின்ன சின்ன
தடுப்பனைகள். வேகம் கூடிய பகுதிகளில் கம்பி வலை கொண்ட கேபியான்
தடுப்பனைகள். Loose rock check dams, gully plugs போன்ற வழிமுறைகளிலும்
நீரின் ஓட்டத்தை குறைத்து நீரை நடக்க வைக்கலாம்.<br /> <br /> இனி நீர்
சேமிக்கும் முறைகள. வாய்காலிலேயே உருவாக்கும் சிறு பள்ளங்களை Sunken ponds
என்று சொல்வார்கள். தவிர விவசாயிகளின் சொந்த நிலத்தில் பண்ணை குட்டைகள்
அமைக்கலாம். நீரை மண்ணுக்குள் வாங்கி, அருகில் உள்ள கிணறுகளுக்கு ஊற்றை
கொடுக்கும் கசிவு நீர் குட்டைகளை (பஞ்சாய்த்து நிலங்களில்) அமைக்கலாம். <br /> <br />
வயல்களுக்கு வரப்புகள் அமைத்து பெய்கின்ற மழை நீரை அங்கேயே சேமிக்கலாம்.
எங்கு அதிகமாக தண்ணீர் பொழிந்து ஓடி வருகிறதோ அங்கு Water absorption
Trench (WAT) அமைக்கலாம். தண்ணீர் இந்த ஒரு அடி ஆழ குழிகளில் விழுந்து,
வேகம் குறைந்து, எழுந்து போகும் போது, பல நன்மைகள் விளைகின்றன. மேல் மண்
அடித்துக் கொண்டு போவது குறையும். மண்ணுக்குள் நீர் கூடுதலாக உள்ளே போகும்.
<br /> <br /> போர் வெல்லுக்கு எதிர் பதமாக நீர் ஓடிவரும் பாதைகளில் நீர்
உறிஞ்சு குழாய்களை அமைக்கலாம். ஆறு அடிக்கு ஒரு போர் குழி தோண்டி அதில்
கூழங்கற்கள் மற்றும் ஆற்று மணல் போட்டு, மேல் பகுதியில் ஒரு பில்டர் மெஷ்
வைத்து ஒரு சிறு தொட்டி மாதிரி கட்டினால், மழை நீர் வேகமாக மண்ணுக்குள்
போகும்.<br /> <br /> ரொம்ப சிம்பிள் : மண்ணையும், மழையையும் அன்போடும்
பாசத்தோடும் கூர்ந்து கவனிக்க தொடங்குங்கள். ஐடியாக்கள் ஆட்டொமேடிக்காக
வந்து விழும்.</span></div>
</div>
</div>
<span class="UIActionLinks UIActionLinks_bottom" data-ft="{"tn":"=","type":20}"><button class="like_link stat_elem as_link" data-ft="{"tn":">","type":22}" name="like" title="Like this item" type="submit"><span class="default_message"></span></button></span></div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-48237134815691372452012-07-25T00:00:00.003+05:302012-07-25T00:00:52.483+05:30தஞ்சை நினைவுகள் - 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="statusUnit">
<div class="-cx-PRIVATE-fbTimelineText__featured">
<div class="text_exposed_root text_exposed" id="id_500ee9788e6a61934586894">
<br /> <br />
மெலட்டூரிலிருந்து தஞ்சை வரும்போதெல்லாம் நான் தவறாமல் சிவகங்கை
பூங்காவுக்கு போயிருக்கிறேன். தற்போது சிங்கப்பூர் சன்டோஸா போய் வந்த பிறகு
சிவகங்ககை பூங்காவெல்லாம் ஜுஜுபி என்று தோன்றலாம். ஆனாலும் என்னை சின்ன
வயசில் அது பரவச படுத்தியிருக்கிறது.<br /> <br /> சிவகங்கை பூங்காவின்
நினைவுகள் அதன் வாசலிலேயே துவங்கி விடுகின்றன. அப்போது பத்து பைசாவுக்கு
பால் ஐஸ் என்று ஒன்று கிடைக்கும். இப்போது அது கிட<span class="text_exposed_show">ைக்கிறதா?
என்ன விலை இருக்கும் என்று தெரியவில்லை. வெள்ளை வெளேரென்று ஸ்வீட்/அரிசி
மாவில் ஐஸொடு கொடுத்தமாதிரி இருக்கும். முழு ஐஸையும் அதன் மத்திய
குச்சியிலிருந்து விழுந்து விடாமல் ஒரு முறை கூட சாப்பிட்டதில்லை.
உள்ளங்கயில் தொடங்கி முழங்கை வரை அது கரைந்து சொட்டும். சாட்சாத் ஷீர
சாகரத்திலிருந்து வந்த அந்த அமிரதத்தை விட மனசே வராது. முழங்கையிலிருந்து
உள்ளங்கைவரை நக்கும் அந்த ரசனையே தனி. இப்படி நக்கும் போது மிச்சமுள்ள ஐஸை
அதன் குச்சியிலிருந்து நழுவிவிட கூடாதே என்ற கவலை வேறு. அன்று தின்ற ஐஸ்
இப்போதும் என் நெஞ்சுக்குள் இனிப்பாக இருக்கிறது.<br /> <br /> சிவகங்கை
கார்டனை சுற்றி வருவதற்கு ஒரு டிரெயின் ஒன்று உண்டு. டிராக்டரை ரயில்வே
எஞ்சினாக மாற்றிய மாதிரிதான் அந்த டிரெயினின் இஞ்சின் இருக்கும். பயங்கரமாக
சத்தம் போடும். குலுங்கும். என்ன ஆனாலும் அந்த பயணம் அந்த வயதில் போயிங்
380 சமமாகாது. நடுவில் புள்ளிமான் கரடு என்ற ஸ்டேஷன் வேறு வரும். ஸ்டைலாக
இறங்கி நிற்போம். வாட்ச்மேன் விடட்டவும் சத்தம் போட்டுக் கொண்டே மீண்டும்
ஏறுவோம்.<br /> <br /> விலங்குகள் அதிகம் இருந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திர
சூழலில்தான் அன்றும் மிருகங்கள் வாழ்ந்தன. கருங்குரங்குகள் இருக்கும்
கூண்டில்தான் அதிகமாக கூட்டம் இருக்கும். கூண்டுக்குள் ஒரு ஊஞ்சல் உண்டு.
மக்கள் குரங்குகளாக மாறிவிட உள்ளே இருக்கும் அந்த மிரண்ட ஜந்து ஊஞ்சலை
ஓங்கி பின்னங்கால்களால் உதைக்கும். அந்த பெருத்த ஓசை வெளியில் இருக்கும்
குரங்குகளை பரவசப்படுத்தும். கையில் இருக்கும் எதை வேண்டுமானாலும் மக்கள்
திங்க கொடுப்பார்கள். கிடைப்பதையெல்லாம் தாடைக்கு கீழே அடக்கி
வைத்திருக்கு, அந்த குரங்குகள் கொள்ளை அழகு (!)<br /> <br /> எப்போதும்
உறங்கிக் கொண்டே இருக்கும் முள்ளம்பன்றியையும், புனுகு பூனையையும் பல முறை
வருத்தத்தோடு கடந்திருக்கிறேன். மற்றபடி பெரிதாக விலங்கினங்கள் என்
நினைவில் வரவில்லை.<br /> <br /> அடுத்ததாக குளத்தின் நடுவே உள்ள தீவுக்கு
போவதற்கு அரதல் பழசான ஒரு கேபிள் கார் இருக்கும். ஒரு நிமிட மட்டுமே
பிரயாணம். ஆனாலும் என்மோ அனுமார் இலங்கையை கடந்தமாதிரி ஒரு பெருமிதம்
எங்களுக்கு வரும்.<br /> <br /> தற்போது தஞ்சையில் உள்ளவர்கள் சிவகங்கை
பூங்காவின் இன்றைய நிலையை எழுதினால் நல்லது. இல்லையேல் நானே அங்கு போய்
பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன்.<br /> <br /> டெயில் பீஸ்: பால் ஐஸை
சொல்லிவிட்டு அதன் அண்ணன் தம்பிகளை சொல்லாமல் விட்டால் எப்படி? கெட்டியான
ஐஸ் கட்டி கலர் கல்ராக குச்சியில் செருகப்பட்டிருக்கும். அப்போது அது ஐந்து
பைசாதான். கடுக் கடுக்கென்று என் தம்பி கடித்து சாப்பிடுவான். எரிச்சலாக
வரும். நான் ஒரு சுக வாசி. அதை சப்பி சப்பி சூம்பு மாதிரி ஆகும் வரை
விடமாட்டேன். ஐஸ் ப்ரூட் என்று சொல்லுவார்கள். அது Brute அல்ல, fruit என்று
மும்பை போன பிறகு தான் தெரிந்தது. அதை பாக்கியராஜ் கொச்சை படுத்தி
சொல்லவும், அது புரிந்துவிடவும், எனக்கு பாக்கிராஜின் மீது மதிப்பு சடாரென
குறைந்து போனது.<br /> <br /> இந்த பனிகட்டி ஐஸ் ப்ரூட்டுக்கு ஒரு அண்ணன்
இருக்கிறார். அது சேமியா ஐஸ். பொமரேனியன் நாய் குட்டி மாதிரி சடையப்ப
வள்ளலாக அந்த ஐஸ் இருக்கும். வாங்கியதும் அதன் பொலிவை பல முறை இப்படியும்
அப்படியுமாக பார்த்துவிட்டுதான் அதை சுவைத்திருக்கிறேன். அது அப்போது பத்து
பைசா.<br /> <br /> அடுத்தது காமார்கட்டு. தற்போது அது இருக்கிறதா. தேங்காயும்
வெல்லப்பாகும் கலந்தது. அதே மாதிரி மெலட்டூர் தீமிதியின் போது கலர் கலராக
சாக்கட்டி மாதிரி குச்சி மிட்டாய் கிடைக்கும். வாய் முழுக்க கலராகிவிடும்.
ஆஹா.... அந்த நாள் வாராதோ !!!!!</span></div>
</div>
</div>
<span class="UIActionLinks UIActionLinks_bottom" data-ft="{"tn":"=","type":20}"><button class="like_link stat_elem as_link" data-ft="{"tn":">","type":22}" name="like" title="Like this item" type="submit"><span class="default_message"></span></button></span></div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-22238250096308874112012-05-12T17:04:00.004+05:302012-05-12T17:04:54.450+05:30Rags to riches<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}">அடுத்த
மாதம் ஜூன் 6 தேதி முதல் ஒரு வாரத்துக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர்
மலேஷியா போகிறேன். முதன் முறையாக அயல் நாடு பயணம். Rags to riches என்கிற
ஆங்கில சொற்கள் எனக்கு பொருந்தும் என நினைக்கிறேன். மெலட்டூர் என்கிற
கிராமத்தில் வருடத்திற்கு 15 ரூபாய் செலவில் அரசு பள்ளியில் தமிழ்
மீடியத்தில் படித்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறேன்.
படிக்கும் காலத்தில் ஒரு தடவை கூட ரயிலில் போனது கிடையாது. <span class="text_exposed_show">கடற்கரையை
பார்த்தது கிடையாது. கப்பல் தெரியாது. விமானம் கூட எப்பவாது எங்கள் கிராம
ஆகாயத்தில் ஒரு சிறு பறவை மாதிரி வெகு உயரத்தில் பறக்கும் போது
பார்த்திருக்கிறேன். அதிக விஷமம் செய்வதால் எனது டிராயரின் பின் பக்கத்தில்
ஓட்டையாகிவிடும். ஒட்டு துணி கொடுத்து ஓட்டையை மறைத்திருக்கிறேன். சிறு
ஓட்டையாக இருக்கும்போது பள்ளி சக நண்பர்கள் அதில் சிறு காகிதங்கள் போஸ்ட்
பாக்ஸ் மாதிரி போட்டு கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். ரொம்ப ஏழ்மை இல்லை.
சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. ஆனால் இந்த மாதிரி சுற்றுலாவெல்லாம் ஒரு
ஆடம்பரமாக எட்டாக் கனியாக இருந்தது. எனது சித்தப்பாக்கள் மும்பையில்
இருந்தார்கள் .அவர்கள் கோடை விடுமுறைக்கு மெலட்டூர் வருவார்கள். அவர்கள்
பேஸ்ட் பிரஷ் உபயோகிப்பார்கள். நாங்கள் கோபால் பல் பொடியை விரல்களால்
தேய்ப்பவர்கள். அந்த சில நாட்கள் மட்டும் வாய் மணக்க கோல்கேட் பேஸ்ட்
தின்போம். அவர்கள் திரும்பி போகும் போது கொண்டு விடுவதற்கு தஞ்சாவூருக்கு
அப்பா போவார். ஒரு சமயம் நானும் வருவேன் என்று அடம்பிடித்து போனேன். காலை
வேளை சோழன் எக்ஸ்பிரஸ். முதல் வகுப்பு பெட்டி. டிரெயின் வந்ததும் பக்கி
மாதிரி நான் முதலில் ஏறி அந்த முதல் வகுப்பு பெட்டியை மலங்க மலங்க
ரசித்தேன். அப்பொது என் சித்தப்பாவின் பெண் 'நீயும் நல்ல வேலை கிடைத்து,
இந்த மாதிரி வசதிகளை அடைவாய்' என்று ஆறுதல் கூறினாள். அது பலித்தது.
படித்ததும் மும்பை போனேன். நபார்டில் வேலை கிடைத்தது. அடுத்த வருடத்திலேயே
முதல் வகுப்பில் சென்னை வந்தேன். அதற்கு அடுத்த இரண்டு வருடத்தில் அப்பா,
அம்மாவை டெல்லிக்கு ராஜதானி ஏ.சி. கோச்சில் அழைத்து போனேன். திரும்பி
வரும்போது ஏரோபிளேனில் அழைத்து வந்தேன். எங்கள் மூவருக்குமே அது முதல்
பயணம். நபார்டில் அதிகாரி ஆனதும் பஸ்ஸில் போவது மாதிரி அடிக்கடி பிளேன்
பயணம் ஆனது. கிட்டத்தட்ட 100 முறைக்கு மேல் பிளேன் பயணம் செய்திருப்பேன்.
ரயில் முதல் வகுப்பு பயணம் என்பதை தாண்டி ஏ.சி. முதல் வகுப்பு வரை பயணம்
செய்தாகிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் பல பகுதிகளை
கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுற்றியாகிவிட்டது. எழுபதுகளில் ஓட்டை
டிராயர் போட்டவன் இன்னும் ஒரு மாதத்தில் சிங்கப்பூர்/மலேஷியா போகப்பொகிறான்
என்பதை நினைக்கும் போது வாழ்க்கையின் வீச்சு புரிகிறது. விதையின் வீரியம்
மட்டும் முக்கியமில்லை அது விதைக்கப்பட்ட இடமும் முக்கியம் என்பது என்
வாழ்க்கை பயணம் சொல்கிறது என்று தெரிகிறது.</span></span></h6>
</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-19568931634986957372012-05-11T11:27:00.000+05:302012-05-11T11:27:05.084+05:30நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - அதற்கான ஒரு ரிஹர்சல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1. ரூபாய் 1000த்துக்கான கேள்வி - தூரத்து பச்சை _______ குளிர்ச்சி<br /><br />ஏ. கண்ணுக்கு பி. காலுக்கு சி. கைக்கு டி. தலைக்கு<br /><br />2. ரூபாய் 2000த்துக்கான கேள்வி - சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயர் பெயர் கொண்ட சினிமா நடிகர் யார் ?<br /><br />ஏ. கமல் பி, ரஜினி சி. சிவாஜி டி. எம்.ஜி.ஆர்<br /><br />3. ரூபாய் 3000த்துக்கான கேள்வி - சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலை எழுதியவர் யார் ?<br /><br />ஏ. கல்கி பி. லஷ்மி சி. சுஜாதா டி. ஜெயகாந்தன்<br /><br />4. ரூபாய் 5000த்துக்கான கேள்வி - சூரிய கிரகனம் என்பது என்ன?<br /><br />ஏ. வெள்ளி சூரியனை மறைப்பது பி. சந்திரன் பூமியை மறைப்பது சி. சந்திரன் சூரியனை மறைப்பது டி. பூமி சூரியனை மறைப்பது<br /><br />5. ரூ 10000த்துக்கான கேள்வி - புனே நகரம் எந்த மாநிலத்தில் உள்ளது?<br /><br />ஏ. கேரளா பி. ஹரியானா சி. உத்திரபிரதேசம் டி.மஹாராஷ்டிரா<br /><br />6. ரூபாய் 20000த்துக்கான கேள்வி - 2016ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக்ஸ் எந்த நகரத்தில் நடக்க இருக்கிறது?<br /><br />ஏ. மும்பை பி. ஹாம்பர்க் சி. டப்ளின் டி. ரியோடிஜெனிரோ<br /><br />7. ரூபாய் 40000த்துக்கான கேள்வி - கிராம நிர்வாக அலுவர்கள் என்பவர்கள் எந்த துறையை சார்ந்தவர்கள்?<br /><br />ஏ. வருவாய் துறை பி. உள்ளாட்சி துறை சி. ஊரக மேம்பாட்டு துறை <br />டி. பொதுப்பணித்துறை <br /><br />8. ரூபாய் 80000த்துக்கான கேள்வி - ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த நகரம் எது?<br /><br />ஏ. சண்டிகர் பி. லூதியானா சி. அமிர்தசரஸ் டி. லாகூர்<br /><br />9. ரூபாய் 160000த்துக்கான கேள்வி - பாராக் _______ ஒபாமா . அமெரிக்க ஜனாதிபதியின் விடுபட்ட நடு பெயர் என்ன?<br /><br />ஏ. ஹாசன் பி. ஹுசைன் சி. ஹென்றி டி.ராபர்ட்<br /><br />10. ரூபாய் 3200000த்துக்கான கேள்வி - 1975ல் நடைபெற்ற முதல் உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர் கொண்ட அணி எது?<br /><br />ஏ. இந்தியா பி. இங்கிலாந்து சி. பாகிஸ்தான் டி. ஆஸ்திரேலியா<br /><br />11. ரூபாய் 6400000த்துக்கான கேள்வி - மொகலாய மன்னர் ஹுமாயூனை தோற்கடித்து டில்லியை கைபற்றிய மன்னர் யார்?<br /><br />ஏ. ஜெங்கிஸ்கான் பி. ஷெர்ஷா சூரி சி. கஜினி முகம்மது டி.இல்துமுஷ்.<br /><br />12. ரூபாய் 1250000த்துக்கான கேள்வி - எந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடந்த போது விளையாட்டு வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்?<br /><br />ஏ. 1980 மாஸ்கோ பி. 2004 ஏதென்ஸ் சி. 1972 ம்யூனிச் டி. 1984 லாஸ் ஏஞ்சலஸ்<br /><br />13. ரூபாய் 2500000த்துக்கான கேள்வி - மஹாபாரதத்தில் சிகண்டியின் முன் ஜென்ம பெயர் என்ன?<br /><br />ஏ. அம்பிகை பி. துஸ்யலா சி. அம்பை டி. இடும்பி<br /><br />14. ரூபாய் 5000000த்துக்கான கேள்வி = டாக்ட்ரின் ஆஃப் லாப்ஸ் என்ற கொள்கையை கொண்டு வந்து இந்திய பகுதிகளை கிழக்கிந்திய கம்பனியில் இனைத்த கவர்னர் ஜெனரல் யார்?<br /><br />ஏ. லார்ட் கானிங் பி. லார்ட் ரிப்பன் சி. லார்ட் டல்ஹௌசி டி. லார்ட் காரன்வாலிஸ்<br /><br />15. ரூபாய் ஒரு கோடிக்கான கேள்வி - சூப்பர் செவ்வாய் என்பது எந்த நாட்டில் பிரபலம்?<br /><br />ஏ. இத்தாலி பி. பிரான்ஸ் சி. அமெரிக்கா டி. இங்கிலாந்து<br />
<br />
<br />
<br />
<br /></div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-33619649748707232952012-05-10T23:03:00.000+05:302012-05-10T23:03:00.634+05:30ரகசிய காமிரா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பத்திர பதிவு அலுவலங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும்.
நித்யா நந்தா சாமியார்களின் படுக்கை அறைகளில் சி.சி.டி.வி. பொருத்த
வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். இவைகளால் எதுவும் மாறப் போவதில்லை.
சார் பதிவாளர் அலுவலகங்களில் எங்கு காமிரா இருக்கிறது, அதன் வீச்சு எதுவரை
என்று லஞ்சம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதன் வீச்சு இல்லாத
இடத்தில் லஞ்சம் வாங்குவதை தொடர்வார்கள். சாமியார்கள் ஒரு படுக்கையறையில்
காமிரா பொருத்துவிட்டு இன்னொரு காமிரா இல்லாத அறையில் சல்லாபம்
செய்யமுடியுமல்லவா? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள் இவர்கள்?</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-71976981131912624502012-05-10T23:01:00.003+05:302012-05-10T23:01:53.539+05:30திருமலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="statusUnit">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4fabfa57addea9b31965867">
சென்ற
ஞாயிறு திருமலையில் இருந்தேன். 50 ரூபாய் ஈ டிக்கெட் வாங்கிக்கொண்டு
போயிருந்தேன். நங்கள் மொத்தம் 17 பேர். பஸ்டாண்டிலிருந்து கோயிலுக்கு
எப்படி போவது என்று தெரியவில்லை. வைகுண்டம் 1 போக வேண்டுமென்றால் கார்
வைக்க வேண்டும் என்றார்கள். 200 ரூபாய் பழுத்தது. சாப்பாட்டுக்கு ஒரு
புறம். செருப்பு வைக்க ஒரு புறம். லக்கேஜ் வைக்க ஒரு புறம் என்று அலைய
வேண்டியிருந்தது. க்யூவில் நிற்க 2 மணிக்கு போக வேண்டும். 1<span class="text_exposed_show">.30க்கே
அனுமதித்துவிட்டார்கள். ஆட்டு மந்தை மாதிரி மக்கள். கோயிலில் சாமி பார்க்க
நிற்கும் போது கூட அசௌகர்யங்களுக்கு கோபப்பட்டார்கள். சண்டை போட்டார்கள்.
யாரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கூண்டு கூண்டாக தாண்டி
வந்தபோது ஒருவரி ஒரு கேட்டை மூடி கொண்டிருந்தார். என்ன என்று விசாரித்தேன்.
"200 ரூபாய் கொடு, உள்ளே விடுகிறேன்" என்றார். ஸ்வாமியின்
கட்டிடத்துக்குள்ளேயே லஞ்சம். இந்த நாடு உருப்பட்டுவிடும். கொடுக்கும்
மக்கள் இருக்கும் போது, கேட்பவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். இரண்டு
காரியங்கள் நடந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஒன்று, பக்தர்களை மிருகங்களை
போல் நடத்தாமல், அமைதியாக வரிசையில் கடவுளை கான செய்ய வேண்டும். காசு
கொடுத்தால் கடவுளின் கழுத்தின் மீது ஏறி உட்காரலாம் என்ற பணதிமிர்
கொண்டவர்களை திருமலையின் அடிவாரம் ஓட ஓட அடித்து விரட்ட வேண்டும்.
நடக்குமா?</span></div>
</div>
</div>
<span class="UIActionLinks UIActionLinks_bottom" data-ft="{"tn":"=","type":20}"><button class="like_link stat_elem as_link" data-ft="{"tn":">","type":22}" name="like" title="Like this item" type="submit"><span class="default_message"></span></button></span></div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-11158675101528644022012-05-10T23:00:00.003+05:302012-05-10T23:00:44.727+05:30தூத்துக்குடி பீச்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எல்லா பீச்சுக்கும் வித்தியாசமாக தூத்துக்குடி பீச் இருக்கிறது. இங்குள்ள
மணலில் களி அதிகம் இருப்பதால் நம் வாகனத்தை அலையடிக்கும் இடம் வரை
எடுத்துவரலாம். மெரீனாவில் இருப்பது மாதிரி நீண்ட மணல் பகுதி இங்கு
மிஸ்ஸிங்க். பார்க்க ஆவலா இருக்கா? அப்ப தூத்துக்குடிக்கு வாங்க.</div>மெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.com1