Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, 19 April 2012

அதெப்படி?

அதெப்படி? அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், தி.மு.க அமைச்சர்கள் மற்றும் மா.செ. எல்லாம் சட்டத்தை மீறியவர்கள் மாதிரியும் அவர்கள் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறது. அம்மா ஆட்சிக்கு வந்தற்க்கு ஒரு நாள் முன்னால் வரை போலீஸ் துரத்தல்களில் இருந்த அ.தி.மு.க. அனுதாபிகள் திடீரென போலிஸ் பார்வையில் பவித்ரமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து இந்த நிலமை தலைகீழாக மாறும். இந்த ஜனநாயக கேலி கூத்துக்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும்? தற்போது காசு பார்த்துக் கொண்டிருக்கும் ஆளும்கட்சி ஜால்ராக்களுக்கு இந்த ஆட்சியிலேயே ஆப்பு அடிக்கப்பட வேண்டும். அது நடப்பதாக இல்லை. கலி காலத்தில் கைமேல் பலன் என்ற கருத்து அரசியலுக்கு பொருந்தாது போலிருக்கிறது. எனவே, அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஓட்டு போட இப்போதே நான் தயாராகிவிட்டேன்.