04.04.2007 தேதியிட்ட நிலாச்சாரல்.காம் இணைய இதழில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன.
உங்கள் வசதிக்கு இதோ இங்கே:
இந்தியா Inc.
பற்றற்றிரு!
சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி
தீபாவளி
ஊரெங்கும் திருவிழா
விண்ணில் கந்தக பூக்கள்
என் கண்களில் வெளிச்சம்
சிவகாசி குழந்தைகளின் அலுமினியக் கைகள்
தேசிய சிக்கல்
இந்த தேசத்திற்கு ஆபத்து
முழங்கிய தலைவருக்கு விக்கல்
தொண்டர்களின் ஓட்டம்
கிடைத்தது பெப்சி
பொது அறிவு
வந்தேமாதரம் பாடுங்கள்
குழந்தைகள் பாடினார்கள்
தாய் மண்ணே வணக்கம்
என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Wednesday, 11 April 2007
Saturday, 10 March 2007
கிராமத்து கவிதை
என் ஆசை மச்சானே !
ஜனமித்ரன் - 01-15 பிப்ரவரி 2007
வெள்ள வேட்டி கட்டி வீதியில போற மச்சான்
சொல்ல வேணுமின்னு சேதியொண்ணு வச்சிருக்கேன்
ஆத்தங்கர ஓரத்தில அரை இருட்டு நேரத்தில
கூடி நாம பேசியதும் குலாவி திரிஞ்சதுவும்
ஊரு சனம் மத்தியில ஒரு மாசமா இருக்குதைய்யா
பொல்லாப்பு வேணாமைய்யா புரிஞ்சுக்க என் மனச
அப்பனையும் ஆத்தாளையும் அளைச்சுக்கிட்டு நீ வரணும்
ஊரையெல்லாம் கூட்டி வச்சு தேதி ஒண்ணு குறிக்கோணும்
அறுப்பு ஆன பின்னே அம்மாசி போன பின்னே
மாரியாத்தா கோயிலிலே மால நாம மாத்திக்கணும்
கால நேரம் பாக்காம சீக்கிரமா செய்யு மச்சான்
காத்திருக்கா உம் மயிலு கன்னாலம் பண்ணிக்க.
ஜனமித்ரன் - 01-15 பிப்ரவரி 2007
வெள்ள வேட்டி கட்டி வீதியில போற மச்சான்
சொல்ல வேணுமின்னு சேதியொண்ணு வச்சிருக்கேன்
ஆத்தங்கர ஓரத்தில அரை இருட்டு நேரத்தில
கூடி நாம பேசியதும் குலாவி திரிஞ்சதுவும்
ஊரு சனம் மத்தியில ஒரு மாசமா இருக்குதைய்யா
பொல்லாப்பு வேணாமைய்யா புரிஞ்சுக்க என் மனச
அப்பனையும் ஆத்தாளையும் அளைச்சுக்கிட்டு நீ வரணும்
ஊரையெல்லாம் கூட்டி வச்சு தேதி ஒண்ணு குறிக்கோணும்
அறுப்பு ஆன பின்னே அம்மாசி போன பின்னே
மாரியாத்தா கோயிலிலே மால நாம மாத்திக்கணும்
கால நேரம் பாக்காம சீக்கிரமா செய்யு மச்சான்
காத்திருக்கா உம் மயிலு கன்னாலம் பண்ணிக்க.
Subscribe to:
Posts (Atom)