Tuesday 10 July, 2007

பூக்களின் மொழி

ஜூன் - 14ம் தேதி சென்னை நாரதகான சாபா மினி ஹாலில் சுபா கிரியேஷனின் 'பூக்களின் மொழி' என்ற ஆடியோ சி.டிக்கான வெளியீட்டு விழா நடந்தது. பிரபல தொழிலதிபர் திரு நாக் ரவி வெளியிட முதல் பிரதியை திரு கிரேஸி மோகன் பெற்றுக் கொண்டார்.

பாண்டிச்சேரி அரவிந்த அன்னை நாம் பூஜைக்கு பயன்படுத்தும் மலர்களை பற்றி பல அரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். மலர்களின் அழகைப் போலவே அதன் பெருமைகளையும் எளிய வார்த்தைகளில் விளக்கியுள்ளார்.

பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு தூதுவனாக செயல்படுகிறதாம் மலர்கள். இந்த பூக்களின் மொழி, வார்த்தைகள் இல்லாத பிராத்தனைகள் என்கிறார் அன்னை. அவை நமக்கு பலவிதமான பலன்களை நமக்கு பெற்றுத் தருமாம்.

பூக்களுக்கு அழகும் மணமும் உண்டு என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அது இறைவனுக்கு அர்பணிக்கும் போது பலனும் உண்டு என்கிறார் அன்னை. நாகலிங்கப் பூவை வைத்து நாம் இறைவனை வழிபட்டால் செல்வளம் பெருகும். செந்தாமரை மன அமைதியைத் தரும். ரோஜா தெய்வீக அருளைத் தரும். கனகாம்பரம் விழிப்புணர்வு மற்றும் கல்வியை தரும். நித்ய கல்யாணி முன்னேற்றத்தை அளிக்கும். அன்னை ஏராளமான மலர்களைப் பற்றி இவ்விதம் பல அருள் உரைகளைச் சொல்லியிருக்கிறார். மலர்கள் அனைத்திலும் பலன்கள்!

அவைகளிலிருந்து எட்டு மலர்களைப் பற்றிய தகவல்களை எடுத்து ஒவ்வொண்றுக்கும் பாடல் எழுதி அதற்கு கொஞ்சமும் மெருகு குலையாமல் கர்நாடக இசை பின்னனியில் மெட்டமைத்து ஒரு இசை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார் திரு பம்பே கண்ணன். திரு டி,கே.ஜெயராமன் இசையமைத்திருக்கிறார்.

அன்றைய விழாவில் ஐந்து பாடல்கள் பரத கலைஞர்களால் நாட்டியமாக வழங்கப்பட்டதன. அன்னையின் திரு உருவமும் அவரது அருளுரையும் எந்த அளவுக்கு அவர் வழி செல்லும் பக்தர்களை கவர்கிறதோ அந்த அளவுக்கு இந்த இசை தொகுப்பும் மனதுக்கு இனிமை சேர்க்கும்.

No comments: