1. ஒரு நடிகர், தான் மிக பிரபலமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தனது நடிப்பை செம்மை படுத்துவதற்காக, ஒரு நாடக குழுவினரை அனுகி, அதில் தன்னை இனைத்து கொண்ட்டார். அவர் யார்? இவர் சூர்யகுடும்பத்தை சார்ந்தவர். சரவணபவ. என்ன கொடுமைடா இது. மைந்தனைச் சொல்லி அப்பனை கண்டுபிடிக்க வேண்டியிருக்கு!
சிவகுமார். மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் அவர் இனைந்து கொண்டார்
2. மலையாள இயக்குனர்கள் தமிழில் நேரடி படங்கள் எடுத்து (ரீ மேக் அல்ல) தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இருவரை குறிப்பிடுக. அந்த படங்கள் எவை? முதலாமவரின் பெயர் ராமனுக்கு உறவு. இந்தப்படத்தில்தான் வடிவேலுக்கு ஒரு திருப்பம் உண்டானது. ஜாதியெல்லாம் வேண்டாம்னா கேட்கமாட்டீங்களே? இரண்டாமவர் டி.ஆர்.
பாலுவுக்கு பிடிக்காத ஒரு வார்த்தையை தன் பெயரில் கொண்டவர். இனிமே சொன்னா
'மேடி தம்பி' கோவிச்சுப்பார்.
அ. பரதன் - தேவர் மகன்
ஆ. சேது மாதவன் - மறுபக்கம் (இந்திரா பார்தசாரதியின் உச்சி வெயில் என்ற குறுநாவலின் திரை வடிவம்)
3. ஒரு தமிழ் திரைப்படத்திற்கான சென்ஸார் சாண்றிதழ் திரும்பப் பெறப்பட்டது. அந்தப்படம் எது? ஆமாங்க. புதுசுன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா?
நியூ - எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த படம்
4. நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காலமான மிகப்பெரும் நாடக நடிகர் யார்? ஒன்று, இரண்டு ரன்கள் அடிக்க சோம்பல் பட்டு 4 ரன்களைஅடித்தே சென்சுரி போடும் கர்நாடக கிரிகெட் வீரரின் பெயருக்கும் இவருக்கும் சம்பந்தம் இருக்கிறது.
விஸ்வநாத தாஸ். முருகன் வேடம் போட்டு வந்தவர் அப்படியே காலமானார். அதே வேடத்தோடு அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.
5. கபாலீஸ்வரர் கோயிலின் கடைசி தேவதாசி யார்? .---------மனோஹரி; திண்டுக்கல் லியோனி கஞ்சனாக நடித்த படத்தின் பெயருக்கும், கேரளாவில் அரிதான இடது சாரி பெண் தலைவரின் பெயருக்கும் சம்பந்தம் இருக்கிறது.
கௌரியம்மாள்
6. நிறம் என்பதன் மொழியாக்க்த்தில் பரதநாட்டியத்தின் ஒரு பிரசித்தமான ஒரு சொல் வெளிப்படும். அது என்ன? கருப்புத்தான் எனக்கு புடிச்ச 'கலரு'
வர்ணம்
7. ஒரு திரைப்படத்தில் மூன்று விதமான கதைகள் நாயகியால் சொல்லப்பட்டும். ஆனால், முடிவு வேறுவிதமாக இருக்கும். அந்த திரைப்படத்தின் பெயர் என்ன? ரொம்ப 'சேஃபா' சொல்லறேன். ஜெயலலிதா நடிச்ச படமுங்க. சூரியகாந்தி இல்லைங்க. இன்னிக்கு ஜெயலலிதாவுக்கு 'இது' ரொம்ப முக்கியமா போச்சுங்க.
பாதுகாப்பு
8.கால்பந்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் எது? தமிழ் ஒரு எழுத்து படம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கும் இந்த படத்தின் பெயருக்கு சம்பந்தம் இருக்குங்க.
லீ - சத்யராஜ் மகன் நடித்த படம்
9. ஓம் சாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு தமிழர்.அவர் யார்?
மணிகண்டன்
10. நீராரும் கடலுடுத்த.. என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசையமைத்தவர் யார்? அந்த பாடலை பாடியவர்கள் யார்? ஏனுங்க. எம்.ஜி.ஆர். சிவாஜி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா யாராக இருந்தாலும் இந்த ரெண்டு குரல்தாங்க மொத்தமா குத்தகை எடுத்துக்கிடுச்சு.
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள். டி.எம்.எஸ் - பி.சுசீலா
Monday 14 January 2008
Subscribe to:
Post Comments (Atom)


1 comments:
மெலட்டூர்,
நீங்களே கேள்வியும் கேட்டு, பதிலையும் கொடுக்கலாமா?
பதிவர்களுக்கும் கொஞ்சம் சான்ஸ் கொடுக்கலாமே?
- சிமுலேஷன்
Post a Comment