Wednesday 6 August, 2008

பாகவதர்களுக்கு ஒரு நம்பிக்கை விளக்கு




அமுதசுரபி - ஆகஸ்ட் 2008

பக்தி மார்க்கத்தில் நாம சங்கீர்த்தனம்தான் பிரதானம். ஜோதி வடிவான இறைவனை இனிய இசையால் மனமுருகி பாடி அவன் அருளை பெறுவதற்காக எண்ணற்ற பஜனை பாடல்களை அரிய பொக்கிஷங்களாக வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள் பாகவதர்கள் என்றழைக்கப்படும் இசை கலைஞர்கள்.

மனசுக்குள் இறைவனை நிலை நிறுத்திக் கொண்டால் அது ஜபம். அதையே கொஞ்சம் இசை சேர்த்து வார்த்தைகளால் அர்ச்சித்தால் அது நாம சங்கீர்த்தனம். "ஒவ்வொரு ன்மீகவாதிக்கும் நாம சங்கீர்த்தனம் என்பது அவன் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பஜனை பாடல்கள் என்றால் ஒரு மனம் மகிழ் கலை நிகழ்சியாகவோ அல்லது ஒரு பொழுது போக்கு அம்சமாகவோ எண்ண வேண்டாம்" என்கிறார் உடையாளூர் கல்யாணராமன்.

"எப்படி காலையில் எழுந்தால் பல் தேய்ப்பது, புத்தகம் படிப்பது, பிழைப்புக்காக வேலைக்கு போவது என்று லௌகீக அனுஷ்டானங்கள்¢ல் ஈடுபடுகிறோமோ, அதே போல தினமும் கொஞ்ச நேரமாவது அந்த நாதஸ்வரூபனுக்கு ஒன்றிரெண்டு நாமவளிகள் சொல்வது நமக்கு நல்லது. சிக்கல்கள் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், நற்சிந்தனைகள் நல்ல செயல்களுக்கு நம்மை இழுத்துச் சென்று நல்ல வினைகளை உண்டாக்கும்" என்கிறார் அவர்.

சபா மேடைகளில் நாம சங்கீர்த்தனம் என்ற புதிய அணுகுமுறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் திரு கல்யாணராமன். இது எப்படி சாத்தியமாயிற்று?

"நாங்கள் ஒன்றும் புதிதாக செய்துவிடவில்லை. பஜனை என்றாலே காட்டு கத்தாலாக ஒரு பெரிய கோஷ்டி, சகல வாத்தியங்களுடன் உச்ச ஸ்தாயில் எம்பி எம்பி குதிப்பார்கள். மக்களும் மகுடி பாம்பாக உணர்சிவசப்பட்டு சேர்ந்திசைப்பார்கள் என்ற மனோபாவம் இன்று பல பேர்களுக்கு இருக்கிறது. உண்மை அதுவல்ல. நம் பாகவதர்கள் மிகப் பெரிய இசை பண்டிதர்கள். எல்லா மொழிகளிலும் எல்லா தெய்வங்களையும் மிக அழகாக பாடி வைத்திருக்கிறார்கள். அவைகளை நாங்கள் மாலை தொடுப்பது மாதிரி இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு துல்லிய உச்சரிப்பு, சுத்தமான ஸ்வரராக கர்நாடக சங்கீதம், அளவான பக்கவாத்தியம், எல்லோரும் பங்கேற்கும் எளிமையான பாடல்கள் என்று ரசிகர்களுக்கு தருகிறோம். நல்ல சங்கீதம் வேண்டுபவர்களும் திருப்தியடைகிறார்கள். பக்தி மார்கத்தினர்களும் பரவசமடைகிறார்கள். வயது, மொழி, ஜாதி வித்தியாசமில்லாமல் அனைத்து மக்களுக்கும் எளிதில் சென்றடைகிறது. நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவமும் புரிந்து விடுகிறது. அதுதான் நாங்கள் விரும்புவது. எங்களுக்கு கிடைத்த பக்கவாத்திய கலைஞர்கள் எங்களது பொக்கிஷம். அவர்களால் எங்களது எண்ணம் எளிதாகிவிட்டது. அதை விட முக்கியமானது, அவன் ட்டுவிக்கிறான். நாங்கள் (பா)டுகிறோம்." என்கிறார் அவையடக்கத்துடன்.

நாம சங்கீர்த்தனத்தின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்து செ(¡)ல்லுவது மட்டுமில்லாமல் அடுத்த உயரத்திற்கு சென்றிருக்கிறார் உடையாளுர். "ஒரு முறை தூத்துக்குடியில் நாம சங்கீர்த்தனதிற்காக போயிருந்தோம். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு யாதவர் ஹார்மோனியம் வாசிக்க வாய்ப்பு கேட்டார். எங்கள் மனசை சங்கடப்படுத்தியது. பாகவதர்கள் பாடிய பாடல்களை பாடி நாம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோமே, ஏன் வசதியற்ற பாகவதர்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்கக் கூடாது என்று தோன்றியது. அதற்கு காஞ்சி பெரியவரின் சியும் கிடைத்தது. உடனே ‘பாகவதா சேவா டிரஸ்ட்’ என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். நாங்கள் கச்சேரிக்காக போகும் இடங்களில்லாம் இன்றைய பாகவதர்களின் நிலமையை எடுத்துச் சொல்லுவோம். சொன்ன மாத்திரத்தில் பொருளுதவி குவிகிறது. இன்று 30 பாகவதர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை அளிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நாம சங்கீர்த்தனத்தில் என்றுமே சாதி வித்தியசம் இருந்ததில்லை. எனவே சேவா டிரஸ்டில் தற்போது நலிவடைந்த ஓதுவார்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் உடையாளுர்.

"எனது சங்கீதப் பயணம் இத்தோடு முடிவடைந்துவிடவில்லை. இறைவனின் சந்நிதானத்தில் இருந்த நாம சங்கீர்த்தனத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சபா மேடைகளை ஒரு ஊடகமாகத்தான் பயண்படுத்தி வருகிறேன். இதை மக்கள் இல்லங்களில் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியமென கருதுகிறேன். இன்றைக்கு பாகவதர்கள் பாடிக் கொண்டிருக்கும் தக்ஷிண ப்ராச்சின பஜனை சம்ப்ரதாயத்தை வகுத்து கொடுத்தவர் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள். அந்த பாதையில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இளைஞர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த நாம சங்கீர்த்தனத்தை ஒரு அகாடமி வாயிலாக முழுமையாக தருவதற்கு முயற்சித்து வருகிறேன். அதன் பூர்வாங்க வேலைகள் முடிந்து விட்டன. இரண்டு செமஸ்டர்கள் கொண்ட ஒரு வருட பட்டைய படிப்பாக கொண்டு வர உத்தேசித்திருக்கிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் அகாடமி அதன் பணியை துவங்கும்" என்று முடித்தார் திரு உடையாளூர் கல்யாண ராமன். நாம சங்கீர்த்தனத்தில் பகாவன் நாமைவைச் சொல்லி 'ஜே' போடுவோம். இங்கே உடையாளூரின் முயற்சி வெற்றியடைய நாமும் ஒரு 'ஜே' போடுவோம்.

பெட்டி செய்தி

பாகவதர்களும் பகவத் ஸ்வரூபங்களே - ஒரு புராணக் கதை

ஒரு முறை நாரதர் வைகுண்டத்தின் வாசலை அடைந்த போது, அதன் வாயிற்காப்போர்களான ஜெயன் விஜயன் கிய இருவரும் அவரை தடுத்தனராம். 'நாராயணனை பார்ப்பதற்கு நீங்கள் தடா போடமுடியாது.' என்று அடம் பிடித்தாராம் நாரதர். அதற்கு வாயிற்காப்போர்கள், 'எம்பெருமான் பூஜை செய்து கொண்டிருக்கிறார். யாரும் தொந்திரவு செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்' என்றனராம். இருந்தாலும் நாரதர் தான் பிடித்தபிடியிலேயே இருக்க, ஒரு வாயிற்காப்போன் உள்ளே போய் நாரதர் வருவதற்கு உத்திரவு கேட்டாராம். அனந்த சயனனும் 'உள்ளே வரச் சொல்' என்றாராம். வந்து பார்த்த நாரதருக்கு சிரிப்பாக வந்ததாம். 'எம் பெருமானே, நாங்கள் உங்களை பூஜித்து மகிழ்கிறோம். நீங்களோ ஒரு பிடி மண்ணை வைத்துக் கொண்டு பூஜை செய்கிறீர்களே. என்ன விந்தை இது? உங்களுக்கு மஹாபாரதப் போர் முடிந்தும் இன்னும் அந்த மண்ணின் மீது இருக்கும் பிரேமை போகவில்லையா?' என்றாராம். அதற்கு அந்த பவளவாய் கமலச் செங்கண் அச்சுதன், ' இதோ நீ பார்க்கிறாயே, இது சாதாரண மண் அல்ல. இது என் பாகவதர்கள் காலடி பட்ட மண். அவர்கள் ஒரு முறை கோவிந்தா என்று அழைத்தற்கே, பிரதியுபகாரமாக என்ன கைங்கர்யம் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவேதான் என்னால் முடிந்த இந்த பூஜை' என்றாராம்.

1 comment:

Sri Srinivasan V said...

Glad to know about that.
Thanks for writing.
God Bless.
Anbudan,
Srinivasan.
Perth, Australia.