Thursday 10 May, 2012

திருமலை

சென்ற ஞாயிறு திருமலையில் இருந்தேன். 50 ரூபாய் ஈ டிக்கெட் வாங்கிக்கொண்டு போயிருந்தேன். நங்கள் மொத்தம் 17 பேர். பஸ்டாண்டிலிருந்து கோயிலுக்கு எப்படி போவது என்று தெரியவில்லை. வைகுண்டம் 1 போக வேண்டுமென்றால் கார் வைக்க வேண்டும் என்றார்கள். 200 ரூபாய் பழுத்தது. சாப்பாட்டுக்கு ஒரு புறம். செருப்பு வைக்க ஒரு புறம். லக்கேஜ் வைக்க ஒரு புறம் என்று அலைய வேண்டியிருந்தது. க்யூவில் நிற்க 2 மணிக்கு போக வேண்டும். 1.30க்கே அனுமதித்துவிட்டார்கள். ஆட்டு மந்தை மாதிரி மக்கள். கோயிலில் சாமி பார்க்க நிற்கும் போது கூட அசௌகர்யங்களுக்கு கோபப்பட்டார்கள். சண்டை போட்டார்கள். யாரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கூண்டு கூண்டாக தாண்டி வந்தபோது ஒருவரி ஒரு கேட்டை மூடி கொண்டிருந்தார். என்ன என்று விசாரித்தேன். "200 ரூபாய் கொடு, உள்ளே விடுகிறேன்" என்றார். ஸ்வாமியின் கட்டிடத்துக்குள்ளேயே லஞ்சம். இந்த நாடு உருப்பட்டுவிடும். கொடுக்கும் மக்கள் இருக்கும் போது, கேட்பவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். இரண்டு காரியங்கள் நடந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஒன்று, பக்தர்களை மிருகங்களை போல் நடத்தாமல், அமைதியாக வரிசையில் கடவுளை கான செய்ய வேண்டும். காசு கொடுத்தால் கடவுளின் கழுத்தின் மீது ஏறி உட்காரலாம் என்ற பணதிமிர் கொண்டவர்களை திருமலையின் அடிவாரம் ஓட ஓட அடித்து விரட்ட வேண்டும். நடக்குமா?

No comments: