நேற்று டிசம்பர் இசை விழாவின் ஒரு அங்கமாக முத்ரா (சென்னை-தி.நகர்) ஒரு
வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தியது. இதில் கர்நாடக இசை, பரதநாட்டியம்,
நாடகம் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. திரு ஞானி
அவர்கள் நாடகம்-சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகளை தொடுத்தார்கள்.
பார்வையாளர்களிலிருந்து ஒரு சிலர் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம்
ஒரு சில கேள்விகள் தொடுக்கப்பட்டது. அந்த வகையில் எனக்கு ஒரு குறுந்தகடு
பரிசு கிடைத்தது.
இனி கேள்விகள்
1. ஒரு நடிகர், தான் மிக பிரபலமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துக்
கொண்டிருந்தாலும், தனது நடிப்பை செம்மை படுத்துவதற்காக, ஒரு நாடக
குழுவினரை அனுகி, அதில் தன்னை இனைத்து கொண்ட்டார். அவர் யார்?
2. மலையாள இயக்குனர்கள் தமிழில் நேரடி படங்கள் எடுத்து (ரீ மேக் அல்ல)
தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இருவரை குறிப்பிடுக.
அந்த படங்கள் எவை?
3. ஒரு தமிழ் திரைப்படத்திற்கான சென்ஸார் சாண்றிதழ் திரும்பப்
பெறப்பட்டது. அந்தப்படம் எது?
4. நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காலமான மிகப்பெரும் நாடக
நடிகர் யார்?
5. கபாலீஸ்வரர் கோயிலின் கடைசி தேவதாசி யார்?
6. நிறம் என்பதன் மொழியாக்க்த்தில் பரதநாட்டியத்தின் ஒரு பிரசித்தமான ஒரு
சொல் வெளிப்படும். அது என்ன?
7. ஒரு திரைப்படத்தில் மூன்று விதமான கதைகள் நாயகியால் சொல்லப்பட்டும்.
ஆனால், முடிவு வேறுவிதமாக இருக்கும். அந்த திரைப்படத்தின் பெயர் என்ன?
8.கால்பந்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் எது?
9. ஓம் சாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு தமிழர்.
அவர் யார்?
10. நீராரும் கடலுடுத்த.. என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு
இசையமைத்தவர் யார்? அந்த பாடலை பாடியவர்கள் யார்?
உங்களுக்கு தெரிந்த பதில்களை பிண்ணுட்டமாக கொடுங்கள்.
எனது பதில்கள் நாளை வெளிவரும்.
Wednesday 26 December 2007
Subscribe to:
Post Comments (Atom)


1 comments:
என்னங்க.. இதுக்கெல்லாம் இன்னும் பதில் சொல்லலையா?
எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
சீமாச்சு..
Post a Comment