Friday 20 April, 2012

பரிதவிக்கும் தமிழ்

நீங்கள் நீ.வெ.ஒ. கோடி நிகழ்ச்சி பார்ப்பவரா? சமீபத்தில் கமல் பெண் சுருதி ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அவர் தினமும் ஒரு படம் பார்பார்களாம். ஆனால் அவள் அப்பா நடித்த அவள் ஒரு தொடர்கதை பற்றி எதுவும் தெரியாதாம். என் நண்பன் ஒரு முறை வேடிக்கையாக சொன்னது இது. இந்தக் கால டாலர் துரத்தும் இளைஞர்களுக்கு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் என்று தெரியாது. சுருதிக்கு ஆங்கில சினிமா பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் தமிழ் சினிமாவில் அப்பாவின் படம் கூட தெரியாது. வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம். ஆங்கில மோகம் தமிழை மறைக்கிறது. கமல் சொன்னது மாதிரி ஆங்கில யானை மோதி தமிழ் செத்துக் கொண்டு இருக்கிறது.

No comments: