Saturday 28 July, 2012

தேவை ஒரு ரண சிகிச்சை

தாம்பரம் முடிச்சூர் சியோன் பள்ளி துயர சம்பவத்திற்கு பிறகு, எல்லா தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதை ஒரு பக்கம் பார்த்தால் சரி என்றே படும். ஆனால் நிர்வகிக்க லாயக்கில்லாத கல்வி துறையால் ஒட்டுமொத்த சீரழிவே ஏற்படும். மக்களே விரும்ப மாட்டார்கள்.

தனியார் கல்வி நிலையங்கள் மலைமுழுங்கிகளாக இருந்தாலும் மக்கள் அதை நோக்கி இன்னமும் போகிறார்கள் என்றால் அதில் காரணம் இருக்கிறது. அரசு பள்ளிகளில் உள்கடமைப்பு குறைபாடுகள் இருக்கின்றன. ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்படியென்றால் என்னதான் தீர்வு? எனக்கு தோன்றிய சில கருத்துக்களை தெரிவிக்கிறேன். அரசு இதை அறிமுகப்படுத்தலாம்.

1. முதலில் கல்வி நிலையங்களில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் காசோலை மூல்மாதான் நடக்க வேண்டும். உள்ளே வரும் பணம், வெளியே போகும் பணம் அனைத்தும் வங்கி கணக்குகள் மூலமாகத்தான் போக வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியும் கண்கானிக்கப்பட வேண்டும்.

2. பள்ளிகளின் அனைத்து சொத்து வளர்ச்சிகளும் இந்த வங்கி கணக்கோடு இனைத்து பார்க்க வேண்டும். கணக்குகளில் வராத எந்த புதிய சொத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் இரண்டாம் கணக்கு (இரண்டாம் பில் புக்) வைத்து பணம் வாங்கும் வழக்கம் அடியோடு ஓய்ந்து போகும்.

3. பள்ளிகள் அனைத்தும் டிரஸ்ட் சட்டத்தில் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சதவிகதத்திற்கு மேல் இலாபம் வந்தால் அது முதலமைச்சர் பொது நிதிக்கு மாற்றப்படும் என்ற அதிரடி உத்திரவை அரசு போட வேண்டும்.

4. கல்வித் துறையிலிருந்து ஒரு நபர், பெற்றோர் குழுமத்திலிருந்து ஒரு நபர், ஆசிரியர்களிருந்து ஒரு நபர், ஒரு சமூக ஆர்வலர் என்ற தொடர் கண்கானிப்பு குழுவை அமர்த்தலாம்.

4. கடுமையான தணிக்கை, கடுமையான கண்கானிப்பு இருந்தால் கல்வி கொள்ளையர்கள், போதும்டா சாமி, இனிமேல் இதில் சம்பாதிக்க முடியாது என்று கஞ்சா காய்ச போய்விடுவார்கள். கல்வித்துறை பிழைக்கும்.

No comments: