Friday 27 July, 2012

களவானிகள் ஜாக்கிரதை

சமீபத்தில் சென்னை சென்றிருந்தேன். ஒரு அரசியல் நண்பரை சந்தித்தேன். முதலமைச்சர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை கடிந்து கொண்டது பற்றி பேச்சு திரும்பியது. ஒரு கவுன்சிலர் இப்படி சொன்னாராம். " நாங்கெல்லாம் என்ன சமூக சேவை செய்யவா அரசியலுக்கு வந்திருக்கோம். முப்பது லட்டச ரூபா முதல் போட்டு இந்த சீட் போட்டு இன்னும் அது மாதிரி ரெண்டு பங்கு செலவழிச்சு வந்திருக்கேன். போட்ட காசுக்கும் மேல ரெண்டு மடங்கு எடுத்தாத்தானே அடுத்த எலக்‌ஷனுக்கு தேவையா இருக்கும். இந்த கணக்கு அம்மாவுக்கு புரியாம என்னவோ பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்க அரசியல் அப்படி. என் அரசியல் இப்படி"

இது எப்படி இருக்கு. தி.மு.க போய் அ.தி.மு.க. வந்தாலும் அல்லது இரண்டுக்கும் மாற்றாக தே.மு.தி.க. அல்லது பா.ம.க. அல்லது ம.தி.மு.க என்று யோசித்தாலும் களவானிகள் எப்படியும் எங்கும் இருப்பார்கள்.

ஆண்டவா. என்ன இது நம் நாட்டுக்கு வந்த சோதனை.

No comments: