Monday 30 July, 2012

மது விலக்கு - அம்மாவுக்கு என் ஆலோசனைகள்

1. மஹாராஷ்ட்டிராவில் ஒரு மது கொள்கை இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மதுக் கடை இருப்பது மக்களுக்கு இடைஞ்சலாக, சமூக சிக்கல்களை உருவாக்கக் கூடிய வகையில் இருந்தால், அதை அரசு ஆராய்ந்து அந்த மது கடைகளை மூடிவிடுகிறது. அந்த நடைமுறையை ஆகஸ்ட் - 15ம் தேதியிலிருந்து துவக்கலாம். காலாண்டுக்கு (குவாட்டருக்கு!!!) 10% மது கடைகளுக்கு உச்ச வரம்பு வைத்து குறைத்துக் கொண்டே வரலாம்.

2. பீர்/விஸ்கிக்கு மாற்றாக அரசே மதுக் கடைகள் மூலமாக கள் வியாபாரம் சில காலங்களுக்கு செய்யலாம். இது கள்ள சாராயத்தை பெருமளவு குறைக்க உதவும்.

3. கேரளாவில் மதுக் கடைகளில் பார் இனைப்பு இல்லை. எனவே, பார்களை ஒட்டு மொத்தமாக மூடிவிட வேண்டும். இந்த கரை வேட்டிகள் இங்குதான் கொள்ளையடிக்கிறார்கள்.

4. பொது இடங்களில் மது அருந்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். இதில் பல நண்மைகள் இருக்கின்றன. வீட்டில் போய் குடிக்க பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். இரண்டாவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டும் கூட்டம் குறையும். விபத்துகள் தவிர்க்கப் படும்.

5. கண்கானிக்கக் கூடிய காவலர்கள் ஏதாவது கையூட்டு பெற்று, புதிய திட்டத்தை குளறுபடி செய்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில் போடப்படுவார்கள் என்ற உத்திரவு வர வேண்டும்.

6. மிடா குடியர்களை குடியிலிருந்து மீட்க மாவட்டம் தோறும் மருத்துவ முகாம்கள் உருவாககப் பட வேண்டும்.

இதை அத்தனையையும் அம்மா செய்தால், நான் நிச்சயமாக, பகிரங்கமாக அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவேன். அதை பெருமையா நினைப்பேன்.

1 comment: